என் மலர்
நீங்கள் தேடியது "வாக்குவாதம் செய்த பெண்"
- தொடர்ந்து அந்த பஸ் இன்று காலை கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள அரசூர் பகுதி யில் உள்ள ஒரு வளைவில் திரும்பியது.
- வேறு பஸ் வர வழைக்கப்பட்டு மாற்று பஸ்சில் பயணிகளை ஈரோட்டுக்கு அனுப்பி ைவக்கப்பட்டனர்.
கோபி:
கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து ஈரோட்டு க்கு ஒரு அரசு பஸ் கோபி செட்டிபாளையம் வழியாக வந்து கொண்டு இருந்தது. இந்த பஸ்சை ஈரோட்டை சேர்ந்த சின்னசாமி என்பவர் ஓட்டி வந்தார். கண்டக்டராக ரவி என்பவர் இருந்தார். இந்த பஸ்சில் 50 பேர் பயணம் செய்தனர்.
இந்த நிலையில் அந்த பஸ் வேகமாக வந்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து அந்த பஸ் இன்று காலை கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள அரசூர் பகுதி யில் உள்ள ஒரு வளைவில் திரும்பியது. அப்போது பஸ்சில் வந்த ஒரு பெண் சீட்டில் இருந்து தவறி விழுந்தார். இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதை கண்ட மற்றொரு பெண் டிரைவரிடம் ஏன் இப்படி வேகமாக செல்கி றீர்கள். மெதுவாக செல்ல வேண்டியது தானே என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து மனம் உடைந்த டிரைவர் பஸ்வை கோபிசெட்டி பாளையம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றார்.
அங்கு பஸ்சை நிறுத்தி விட்டு கோபிசெட்டி பாளையம் அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு தனக்கு உடல்நிலை சரியில்லை என கூறி சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு அவர் சகிச்சை பெற்று வருகறார்.
இதனால் பயணிகள் போலீஸ் நிலையம் அருகே தவித்தனர். போலீசார் பயணிகளிடம் விசாரணை நடத்தி அவர்களை சமா தானம் செய்தனர். இதை யடுத்து வேறு பஸ் வர வழைக்கப்பட்டு மாற்று பஸ்சில் பயணிகளை ஈரோட்டுக்கு அனுப்பி ைவக்கப்பட்டனர்.
இதனால் இன்று காலை அந்த பகுதி யில் பரபரப்பான நிலை உருவானது.






