என் மலர்
நீங்கள் தேடியது "மகா சுதர்சன ஹோமம்"
- 27 நாட்கள் நடைபெறுகிறது
- விசேஷ திரவியங்களுடன் அபிஷேகம்
ராணிப்பேட்டை:
வாலாஜா அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு பஞ்சமுக வராகி அம்மனுக்கு நடைபெற்று வந்த ஹோமம், அபிஷேக பூஜைகள் நிறைவடைந்தது.
இந்த நிலையில் தொடர்ந்து 27 நாட்கள் நடைபெறும் லட்ச ஜப மகா சுதர்சன ஹோமம், அபிஷேகம்,பூஜைகள் நேற்று தொடங்கியது.
ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் தலைமையில், உலக நலன் கருதி நடைபெறும் இந்த ஹோமம் நேற்று சுதர்சன ஜெயந்தி முதல் வருகிற 24-ந்தேதி வரை 27 நாட்கள் தினமும் கோ பூஜை மற்றும் கணபதி ஹோமத்துடன் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
27 கலசங்கள் வைத்து ஹோமமும், 27 விசேஷ திரவியங்களுடன் தன்வந்திரி பீடத்தில் அருள்பாலிக்கும் சக்கரத்தாழ்வார் எனப்படும் ஸ்ரீ சுதர்சன ஆழ்வாருக்கு அபிஷேகமும் நடைபெறுகிறது.
மனதில் ஏற்படும் பயம், குழப்பங்கள் நீங்கிட, எதிரிகள் தொல்லை, பதவி உயர்வு, பணி மாற்றம் கிடைக்க, ஆயுள் பயம் நீங்கி ஆரோக்யம் அதிகரிக்க. நட்சத்திர, கிரக ரீதியான தோஷங்கள் விலகிட வேண்டி நடைபெறும் இந்த ஹோமம் மற்றும் அபிஷேக பூஜைகளில் பக்தர்கள் பங்கேற்று பயன்பெறலாம் என பீடாதிபதி முரளிதரஸ்வாமிகள் தெரிவித்துள்ளார்.
இதற்கான ஏற்பாடுகளை தன்வந்திரி குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.
- முடிவில் காலை 8 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதங்கள், அன்னதானம் வழங்கப்படுகிறது.
- விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
காங்கயம்:
திருப்பூர் மாவட்டம், முத்தூர் சீதாதேவி, பூமாதேவி சமேத மாதவராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு நாளை காலை 5.30 மணிக்கு மங்கள இசையுடன் விழா தொடங்கப்பட்டு நாட்டில் நல்ல மழை பெய்ய வேண்டியும், தொழில் வளம் சிறந்து விளங்கவும், பொருளாதார நிலை மேம்படவும், திருமணத்தடை நீங்கவும் மகா சுதர்சன ஹோமம் மற்றும் மகாலட்சுமி கனக அபிஷேக பூஜைகள் நடைபெறுகிறது.விழாவின் முக்கிய நிகழ்வாக அன்று காலை 6.30 மணிக்கு மாதவராஜ பெருமாள், ஞானவிநாயகர், சுவர்ண கருடன், பால ஆஞ்சநேயர், விஷ்ணு துர்க்கை ஆகிய பரிவார மூர்த்திகளுக்கு பால், தயிர், இளநீர், திருமஞ்சனம் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, புதிய பட்டாடை உடுத்தப்பட்டு, சிறப்பு மலர் அலங்காரத்துடன், மகா தீபாராதனை பூஜைகள் நடக்கிறது.முடிவில் காலை 8 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதங்கள், அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவில் திரளான பக்தர்கள், நகர, சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொள்கின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.






