என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிளை நூலகம்"

    • போட்டித் தேர்வுக்கு படிக்கும் கிராமப்புற மாணவர்களுக்கு கிளை நூலகம் பயனுள்ளதாக இருக்கும்..
    • கிளை நூலகம் முழு நேரம் செயல்படுத்தப்பட்டால் பொதுமக்கள் பயனடைவர்.

    வெள்ளகோவில்:

    முத்தூர் பஸ் நிலையம் அருகில் கிளை நூலகம் செயல்படுகிறது. இதை விரிவாக்கம் செய்து முழு நேர நூலகமாக செயல்படுத்தினால் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் ,பொதுமக்கள் ,முதியவர்கள் பயனடைவார்கள்.

    இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் மூலமாக மாணவ மாணவிகள் மாலை நேரத்தில் நூலகத்திற்கு சென்று தங்களுக்கு தேவையான பாடநூல்கள், வரலாறு, கவிதை, கதை, நாவல் மற்றும் இலக்கியங்கள் உள்ளிட்ட பொது அறிவு நூல்களைப் படிப்பதற்கு வசதியாக இருக்கும். போட்டித் தேர்வுக்கு படிக்கும் கிராமப்புற மாணவர்களுக்கு பயன்படும். ஆகவே நூலகத்தை விரிவாக்கம் செய்து முழு நேர நூலகமாக மாற்ற வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த சில வருடங்களாக கிளை நூலகம் திறக்கப்படுவதில்லை.
    • கிளை நூலகம் இல்லாமல் மாணவர்கள், இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பல்லடம்:

    சுக்கம்பாளையம் பகுதி கிராம மக்கள் திருப்பூர் மாவட்ட நூலக அலுவலருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது :-பல்லடம் வட்டாரம் சுக்கம்பாளையம் கிராம ஊராட்சியில் பகுதி நேர கிளை நூலகம் இயங்கி வந்தது. அந்த நூலகத்தில் மாணவர்கள், இளைஞர்கள் சென்று பல்வேறு நூல்களைப் படித்து அறிவுத்திறனை வளர்த்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக கிளை நூலகம் திறக்கப்படுவதில்லை. தற்போது கிராம நிர்வாக அலுவலர் அலுவலமாக செயல்பட்டு வருகிறது. கிளை நூலகம் இல்லாமல் மாணவர்கள், இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, செயல்படாமல் உள்ள கிளை நூலகத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம் .இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×