என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுக்கம்பாளையத்தில் கிளை நூலகம் மீண்டும் செயல்பட கோரிக்கை
    X

    கோப்புபடம்


    சுக்கம்பாளையத்தில் கிளை நூலகம் மீண்டும் செயல்பட கோரிக்கை

    • கடந்த சில வருடங்களாக கிளை நூலகம் திறக்கப்படுவதில்லை.
    • கிளை நூலகம் இல்லாமல் மாணவர்கள், இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பல்லடம்:

    சுக்கம்பாளையம் பகுதி கிராம மக்கள் திருப்பூர் மாவட்ட நூலக அலுவலருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது :-பல்லடம் வட்டாரம் சுக்கம்பாளையம் கிராம ஊராட்சியில் பகுதி நேர கிளை நூலகம் இயங்கி வந்தது. அந்த நூலகத்தில் மாணவர்கள், இளைஞர்கள் சென்று பல்வேறு நூல்களைப் படித்து அறிவுத்திறனை வளர்த்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக கிளை நூலகம் திறக்கப்படுவதில்லை. தற்போது கிராம நிர்வாக அலுவலர் அலுவலமாக செயல்பட்டு வருகிறது. கிளை நூலகம் இல்லாமல் மாணவர்கள், இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, செயல்படாமல் உள்ள கிளை நூலகத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம் .இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×