என் மலர்
நீங்கள் தேடியது "சிவசக்தி மாரியம்மன் கோவில்"
- நேற்று காலை நான்காம் கால யாகசாலை பூஜை, பிம்ப சுத்தி, சுவாமிக்கு காப்பு கட்டுதல் நடைபெற்றது.
- அனைத்து தெய்வங்களுக்கும் 21 வகையான அபிஷேகம் நடைபெற்றது.
சிவகிரி:
சிவகிரி கீழ மாரியம்மன் கோவில் தெரு சிவசக்தி மாரியம்மன் கோவிலில் விநாயகர், சிவசக்தி மாரியம்மன், பைரவர், கருப்பசாமி ஆகிய தெய்வங்களுக்கு தனி சன்னதி மற்றும் கோபுரம், முன் மண்டபம் உள்பட பல்வேறு திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டது.
கும்பாபிஷேகம்
இதன் கும்பாபிஷேக விழா நடைபெறுவதை முன்னிட்டு கோவில் முன்பு யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்டு, கடந்த 21-ந்தேதி காலை 9 மணிக்கு விநாயகர் பூஜையுடன் தொடங்கியது.
தொடர்ந்து கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி பூஜை, புதிய விக்கிரகங்களுக்கு கண் திறத்தல் சாந்தி நடைபெற்றது. கும்பாபிஷேக நாளான நேற்று காலை நான்காம் கால யாகசாலை பூஜை, பிம்ப சுத்தி, சுவாமிக்கு காப்பு கட்டுதல் நடைபெற்றது.மகா பூர்ணாகுதி தீபாராதனை, யாத்திரதானம், கடம் புறப்படுதல் தொடர்ந்து, குடங்களில் யாகசாலை தீர்த்தம் கொண்டு செல்லப் பட்டது. முதலில் மூலவர் விமானம் கும்பாபிஷேகமும், தொடர்ந்து விநாயகர், அம்மன், பைரவர், கருப்ப சுவாமிக்கு மேலே உள்ள கலசங்களில் நீர் தெளிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அபிஷேகம்
அனைத்து தெய்வங்க ளுக்கும் பால், பன்னீர், நெய், இளநீர் உட்பட 21 வகையான நறுமண பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பட்டுப் புடவைகளாலும், மலர் மாலைகளாலும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டி பூஜை நடைபெற்றது.
பக்தர்களுக்கு விபூதி, குங்குமம், சந்தனம், பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபி ஷேகத்தை லண்டன் கணபதி சுந்தர குருக்கள், சிவ முத்துராம சுந்தர குருக்கள் நடத்தினார்கள்.
விழா ஏற்பாடுகளை கும்பாபிஷேக விழா கமிட்டி தலைவர் திருஞானம், துணைத்தலைவர் ராம மூர்த்தி, பொருளாளர் சுப்பிரமணியன், செயலா ளர் அய்யனார், தண்டல் வீரபாண்டியன் மற்றும் வாலிபர் சங்கத்தின் நிர்வாகிகள், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்து இருந்தனர்.
கலந்து கொண்டவர்கள்
விழாவில் முன்னாள் காவல்துறை ஐ.ஜி. மாசான முத்து, ஓய்வு பெற்ற தடவியல் துறை இயக்குனர் விஜயகுமார், அரசு முன்னாள் கூடுதல் செயலாளர் சந்திரகுமார், முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகசாமி, முன்னாள் மாநகராட்சி தலைமை பொறியாளர் முத்துராஜ், சிவகிரி தேவர் மகாசபை தலைவர் குருசாமி பாண்டியன், எஸ்.தங்கப்பழம் குழுமத்தின் தலைவர் எஸ்.தங்கப்பழம், எம்.எல்.ஏ.க்கள். பழனி நாடார், சதன் திருமலைக்குமார், வாசுதேவ நல்லூர் யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. மனோகரன், முன்னாள் செங்கோட்டை யூனியன் சேர்மன் சட்டநாதன், ஊத்து மலை இளைய ஜமீன்தார் முரளி ராஜா, மாநில காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு உறுப்பினர்கள் வக்கீல் சங்கை கணேசன், வாசுதேவநல்லூர் நாகராஜன், தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி செயலாளர் மூர்த்திப் பாண்டியன், தென்காசி மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் உதயகிருஷ்ணன், சிவகிரி பேரூராட்சி மன்ற தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு, துணைத் தலைவர் லட்சுமி ராமன், செயல் அலுவலர் வெங்கட கோபு, சிவகிரி சேனைத்தலைவர் மகாசபை தலைவர் மாரியப்பன், வார்டு உறுப்பினர் கலா என்ற கல்யாண சுந்தரி, முத்து அருணாச்சலம், வக்கீல் துரைப்பாண்டி, காசிராஜன், தலையாரிகள் வேல்முருகன், அழகுராஜா, நெல்லை, தென்காசி மாவட்ட காங்கிரஸ், தி.மு.க., ம.தி.மு.க., அ.தி.மு.க. நிர்வாகிகள், கீழ மாரியம்மன் கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






