என் மலர்
நீங்கள் தேடியது "அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்"
- தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் புதிய பஸ் நிலையம் அருகில் நடைபெற்றது.
- செந்தில் பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வ லியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் புதிய பஸ் நிலையம் அருகில் அண்ணா சிலை எதிரில் நேற்று நடைபெற்றது. இதற்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும், அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வ லியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தமிழ்செல்வம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன், மனோரஞ்சிதம் நாகராஜ், முனிவெங்கட்டப்பன், கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தங்கமுத்து, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- கே.பி.முனுசாமி தலைமை யில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- மேற்கு மாவட்ட செயலாளருமான பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ண கிரி புதிய பேருந்து நிலையம் அருகே நேற்று விலைவாசி உயர்வை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. துணை பொதுச்செ யலாளரும், சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி தலைமை யில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார், முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்ட செயலாளருமான பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சதீஷ்குமார், மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன், ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் தமிழ்செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சிவி ராஜேந்திரன், மனோரஞ்சிதம் நாகராஜ், முனி வெங்கட்டப்பன், கிருஷ்ணகிரி ஒன்றிய குழு தலைவர் அம்சராஜன், ஒன்றிய செயலாளர்கள் சோக்காடி ராஜன், கிருஷ்ணன், கன்னியப்பன், ஒன்றிய குழு தலைவர் பையூர் ரவி, சைலேஷ் கிருஷ்ணன், நகர செயலாளர்கள் கேசவன், விமல், மாவட்ட மாணவரணி மோகன், அம்மா பேரவை தங்கமுத்து, அ.தி.மு.க. நிர்வாகி ஜெகதீஷ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பெருமாள், அ.தி.மு.க. நிர்வாகிகள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






