என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அழகிப்போட்டி"

    • திருமணமான பெண்களுக்கான பிரிவில் நடைபெற்ற போட்டியில் 15-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு மிடுக்கான உடை அணிந்து வலம் வந்தனர்.
    • முதல் இடத்தை பெற்றவர்களுக்கு கிரீடம் மற்றும் பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டது.

    நெல்லை:

    அகில இந்திய சிகை அலங்காரம் மற்றும் அழகு கலை நிபுணர்கள் சங்கம் சார்பில் 2023-ம் ஆண்டுக்கான 'மிஸ் அண்ட் மிஸ்ஸஸ்-நெல்லை' பட்டத்துக்கான அழகிப்போட்டி நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

    இதில் 5 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு 3 பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. மேலும் 5 வயது முதல் 12 வயது வரையிலானவர்களுக்கும், 12 முதல் 18 வயதிலானவர்களுக்கும், 3-வது பிரிவாக 50 வயது வரையான பெண்களுக்கும் போட்டி நடைபெற்றது.

    திருமணமான பெண்களுக்கான பிரிவில் நடைபெற்ற போட்டியில் 15-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு மிடுக்கான உடை அணிந்து வலம் வந்தனர். தொடர்ந்து பெண்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக மருதாணி வைத்தல், பாரம்பரிய உடை, நவநாகரிக உடை என பல்வேறு வகையான போட்டிகள் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

    திருமணம் ஆனவர்களுக்கான போட்டியில் முதல் இடத்தை போடியை சேர்ந்த டாப்னியும், 2-வது இடத்தை அம்பாசமுத்திரத்தை சேர்ந்த தேவியும் தட்டிச்சென்றனர். இதனை தொடர்ந்து நடைபெற்ற திருமணமாகாத பெண்களுக்கான அழகி போட்டியில் முதல் இடத்தை தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அணா பாலனும், 2-வது இடத்தை நெல்லை மாவட்டம் கே.டி.சி. நகரை சேர்ந்த அபர்ணாவும் தட்டி சென்றனர்.

    முதல் இடத்தை பெற்றவர்களுக்கு கிரீடம் மற்றும் பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து மெகந்தி போட்டி, ஆடை அலங்கார போட்டி, சிறுவர்களுக்கான மாறுவேட போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    பெண்களின் தன்னம்பிக்கையை ஊக்குவிக்கவும், தனியாக தொழில் செய்ய மன தைரியத்தை உருவாக்கவும், கிராமப்புற பெண்களுக்கான வேலைவாய்ப்பு உறுதிப்படுத்தவும் இதுபோன்ற போட்டிகள் நடத்தி வருவதாக விழா ஏற்பட்டாளர்கள் தெரிவித்தனர்.

    • எனக்கு திருமணமாகி குழந்தை பிறந்த பிறகு எனது உடல் பருமனாகி விட்டது.
    • இண்டர்நேஷனல் அமெரிக்கா என்ற போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளேன்.

    சென்னை:

    பிலிப்பைன்ஸ் நாட்டில் திருமணமான பெண்களுக்கான அழகிப் போட்டி நடந்தது. இந்த போட்டியில் பல்வேறு நாடுகளில் இருந்து திருமணமான 100-க்கும் மேற்பட்ட அழகான பெண்கள் கலந்து கொண்டனர்.

    இந்த போட்டியில் சென்னையை சேர்ந்த மீனா கல்யாண் என்ற பெண்ணும் கலந்து கொண்டார். இந்த போட்டி பல்வேறு சுற்றுகளாக நடந்தது. ஒவ்வொரு சுற்றுகளிலும் மீனா கல்யாண் தொடர்ந்து முன்னேறினார்.

    பின்னர் நடந்த இறுதி சுற்றில் இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தி மீனா கல்யாண் வெற்றி பெற்று அழகான பெண்மணி என்ற பட்டத்தை வென்றார்.

    அழகிப்போட்டியில் பட்டம் வென்று சென்னை திரும்பிய மீனா கல்யாண் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எனக்கு திருமணமாகி குழந்தை பிறந்த பிறகு எனது உடல் பருமனாகி விட்டது. நான் பருமனாக இருப்பதை பார்த்து பலரும் கேலி பேசினார்கள். நிறைய பேர் என்னிடம், நீங்கள் ஏன் உடல் எடையை குறைக்கவில்லை என்றும் கூறினார்கள். இதனால் நான் மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளானேன்.

    எனவே ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது. அதன் மூலம் தான் மன அழுத்தத்தில் இருந்து வெளியே வர முடியும் என்றும் கருதினேன். சாதிக்க வேண்டும் என்பதையே எனது லட்சியமாகவும் கொண்டேன்.

    ஏற்கெனவே இண்டர்நேஷனல் அமெரிக்கா என்ற போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளேன். தற்போது மனம் தளராமல் முயன்று பிலிப்பைன்சில் நடந்த திருமணமான பெண்களுக்கான அழகிப்போட்டியில் பங்கேற்று பட்டம் வென்றுள்ளேன். இதன் மூலம் எனது லட்சியத்தை அடைந்து விட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×