என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டா வழங்க சிறப்பு முகாம்"

    • ஈரோடு மாவட்டத்தில் ரயத்து நிறுத்தப்பட்டது என பதிவு செய்யப்பட்ட மனை இனங்களுக்கு பட்டா வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
    • வருவாய் கிராமம் வாரியாக மனுக்களை பெற உள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் அனைத்து பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி பகுதியில் நத்தம், நகர நில அளவை கிராம ஆவணங்களில் 'ரயத்து நிறுத்தப்பட்டது' என பதிவு செய்யப்பட்ட ரயத்து மனை, ரயத்து நஞ்சை, ரயத்து புஞ்சை இனங்களுக்கு விசாரணை மற்றும் ஆவண ங்களின்படி பட்டா வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதற்காக சிறப்பு முகாம் தாசில்தார் மற்றும் தனி தாசில்தார் தலைமையில் கடந்த 2-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. தற்போது 38,025 இனங்கள் நிலுவையில் உள்ளது.

    இந்நிலங்களுக்கு விசா ரணை மேற்கொண்டு வரும் 30-ந் தேதி வரை மனுக்கள் பெற முகாம் நடக்கிறது. ஈரோடு கிழக்கு உள் வட்டத்துக்கு மாணிக்க ம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகம்,

    சூரம்பட்டி நில வருவாய் ஆய்வாளர் அலுவ லகம், காசிபாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் வரும் 20-ந் தேதி மற்றும் 27-ந் தேதி முகாம் நடக்கிறது.

    ஈரோடு மேற்கு உள் வட்டத்துக்கு வில்லரச ம்பட்டி கிராம நிர்வாக அலுவ லகம், புத்தூர் புதுப்பாளையம் கிராம நிர்வாக அலுவலகம், நசியனுார் நில வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் வரும் 21-ந் தேதி மற்றும் 28-ந் தேதி வரையும்,

    ஈரோடு வடக்கு உள் வட்டத்துக்கு காளிங்கராயன்பாளையம் நிலவருவாய் ஆய்வாளர் அலுவலகம், சர்க்கார் பெரிய அக்ரஹா ரம் கிராம நிர்வாக அலுவ லகத்தில் வரும் 22-ந் தேதி மற்றும் 29-ந் தேதி வரை முகாம் நடக்க உள்ளது.

    மொடக்குறிச்சி உள் வட்டத்துக்கு மொடக்குறிச்சி நிலவருவாய் ஆய்வாளர் அலுவலகம், எழுமாத்தூர் கிராம நிர்வாக அலுவலகம், நஞ்சை ஊத்துக்குளி கிராம நிர்வாக அலுவலகத்தில் வரும் 20-ந் தேதி மற்றும் 27-ந் தேதி வரையும்,

    அவல்பூந்துறை உள் வட்டத்துக்கு அவல்பூந்துறை நில வருவாய் ஆய்வாளர் அலுவலகம், கஸ்பாபேட்டை கிராம நிர்வாக அலுவலகம், புதூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் வரும் 21-ந் தேதி மற்றும் 28-ந் தேதி முகாம் நடக்க உள்ளது.

    அரச்சலுார் உள் வட்டத்துக்கு அரச்சலூர் நில வருவாய் ஆய்வாளர் அலுவலகம், விளக்கேத்தி, முகாசி அனுமன்பள்ளியில் வரும் 22-ந் தேதி மற்றும் 29-ந் தேதி முகாம் நடக்க உள்ளது.

    கொடுமுடி உள் வட்டம் வெங்கம்பூர் கிராம நிர்வாக அலுவலகம், கொடுமுடி நில வருவாய் ஆய்வாளர் அலுவலகம், எழுநூத்திமங்கலம் கிராம நிர்வாக அலுவலகத்தில் வரும் 20-ந் தேதி மற்றும் 27-ந் தேதியும்,

    கிளாம்பாடி உள் வட்டத்தில் ஊஞ்சலுார்அகிராம நிர்வாக அலுவலகம், புஞ்சை கொளாநல்லி கிராம நிர்வாக அலுவலகம், புஞ்சை கிளாம்பாடி நில வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் வரும் 21-ந் தேதி மற்றும் 28-ந் தேதி முகாம் நடக்க உள்ளது.

    சிவகிரி உள் வட்டம் சிவகிரி நில வருவாய் ஆய்வாளர் அலுவலகம், கொல்லன்கோவில் கிராம நிர்வாக அலுவலகம், அஞ்சூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் வரும் 22-ந் தேதி மற்றும் 29-ந் தேதி,

    சென்னிமலை உள் வட்டம் சென்னிமலை நிலவருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் 20, 22, 27, 29-ந் தேதியிலும் முகாம் நடக்க உள்ளது.

    தவிர சிறப்பு குழுவினராக தாசில்தார், தனி தாசில்தார்கள் நியமிக்கப்பட்டு வருவாய் கிராமம் வாரியாக மனுக்களை பெற உள்ளனர்.

    ×