என் மலர்
நீங்கள் தேடியது "மூலிகை மரக்கன்றுகள்"
- சித்த மருத்துவ பிரிவின் அருகில் மூலிகை தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
- 30-க்கும் மேற்பட்ட மூலிகை மரக்கன்றுகள் நடப்பட்டது.
பவானி:
பவானி- அந்தியூர் மெயின் ரோட்டில் அரசு மருத்துவ மனை செயல்பட்டு வருகிறது. அரசு மருத்துவ மனை வளாகத்தில் சித்த மருத்துவப் பிரிவு உள்ளது.
இந்த சித்த மருத்துவப் பிரிவில் தினமும் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த பொதுமக்கள் பலர் வந்து பல்வேறு வகையான நோய்களுக்கு சிகிச்சை பெற்று செல்கிறார்கள். சித்தா டாக்டர்.கண்ணுச்சாமி பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து ஆலோசனை வழங்கி வருகிறார்.
அதேபோல் இந்த சித்த மருத்துவ பிரிவின் அருகில் மூலிகை தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மூலிகை தோட்டத்தில் உலக சுற்று ச்சூழல் தினத்தை முன்னிட்டு 30-க்கும் மேற்பட்ட மூலிகை மரக்கன்றுகள் நடப்பட்டது.
இதில் டாக்டர் கண்ணு சாமி, உதவி கோட்டப் பொறியாளர் (ஓய்வு) ஆறு முகம், பவானி ஜமக்காளத் தொழிலாளர் சங்கத்தைச் சார்ந்த வாசுதேவன், மருந்தாளுநர் ரைசூல் இஸ்லாம் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு மூலிகை டீ வழங்கப்பட்டது.






