என் மலர்
நீங்கள் தேடியது "கோபி சாரதா மாரியம்மன்"
- முக்கிய நிகழ்ச்சியான திருவிழா இன்று நடந்தது.
- அக்னி கும்பம் எடுத்து வருதல், பக்தர்கள் அலகு குத்துதல் நிகழ்ச்சிகள் நடந்தன.
கோபி:
கோபி கடைவீதியில் பிரசித்தி பெற்ற சாரதா மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு வருட ந்தோறும் சித்திரை மாதம் சித்திரை பெருந்தி ருவிழா நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டுக்கான பூச்சாட்டுதல் விழா கடந்த 4-ந் தேதி நடைபெற்றது. 10-ந் தேதி திருக்கம்பம் நடுதல் நிகழ்ச்சியும், 15-ந் தேதி அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரமும் நடைபெற்றது.
தொடர்ந்து 16-ந் தேதி 108 விளக்கு பூஜை, பூச்சொரிதல் நிகழ்ச்சி மற்றும் பட்டுபோர்த்தி ஆடு தல் நிகழ்ச்சியும் நடந்தன. 17-ந் தேதி பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும், மலர் பல்லக்கில் அம்மை அழைப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
முக்கிய நிகழ்ச்சியான திருவிழா இன்று நடந்தது. பெண்கள் மாவிளக்கு எடுத்து வருதல் நிகழ்ச்சியும், பக்தர்கள் பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும் நடை பெற்றது.
அதைத்தொ டர்ந்து அக்னி கும்பம் எடுத்து வருதல், பக்தர்கள் அலகு குத்துதல் நிகழ்ச்சிகள் நடந்தன.
தொடர்ந்து இரவு கம்பம் பிடுங்குதல் நிகழ்ச்சி நடை பெறுகிறது. அதை த்தொடர்ந்து பூத வாகன காட்சி நடக்கிறது. நாளை மஞ்சள் நீர் உற்சவம், அம்மன் சிம்ம வாகனத்தில் காட்சியளிக்கிறார்.
நாளை மறுநாள் மஞ்சள் நீர் உற்சவம், ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சியோடு இந்த ஆண்டுக்கான திருவிழா நிறைவு நடைபெறுகிறது.






