என் மலர்
நீங்கள் தேடியது "டி.என்.பி.எஸ்.சி. மதுரை ஐகோர்ட்டு"
- டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கூறினார்.
- வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
மதுரை
திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா மேட்டுப்பட்டியை சேர்ந்த லட்சுமணகுமார் மதுரை ஐகோர்ட்டில தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன். இளங்கலைப் பட்டப் படிப்பை முடித்துள்ளேன். 21.7.2022 அன்று டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வுக்கு 92 காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியானது.
முதல்நிலை தேர்வு கடந்த 19.11.2022 அன்று நடந்தது. இந்த சூழ்நிலையில் முதல்நிலை தேர்வு முடிந்து 10 நாட்களுக்கு பிறகு 28.11.2022 அன்று உத்தேச வினா விடை வெளி யிடப்பட்டது. அதில் தவறு கள் இருந்தால் இது குறித்து 7 நாட்களில்க்குடி.என்.பி.எஸ்.சி. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை தொடர்ந்து நான் 5.12.2023 அன்று நான் 19 கேள்விகளின் விடை தவ றாக குறிப்பிடப்பட்டு உள்ளது என்று ஆதாரத்து டன் விண்ணப்பித்தேன். உத்தேச வினா-விடை குறித்து என்னுடைய ஆட்சே பனை குறித்து வல்லுநர் குழு எந்த பதிலும் வழங்க வில்லை.
இந்த நிலையில் 28.04.2023 அன்று முதல்நிலை தேர்வு முடிவு கள் டி.என்.பி.எஸ்.சி.யால் வெளியிடப்பட்டுள்ளது. அவர்கள் தங்களுடைய ஆவணங்களை பதிவேற்றம் செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர். நான் தேர்வு செய்யப்படவில்லை. குரூப்-1 மெயின் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய கோரப்பட்டனர்.
எனவே உத்தேச வினாவிடை குறித்து என்னுடைய ஆட்சேபனை குறித்து வல்லுநர் குழு எந்த பதிலும் வழங்காமல் முதல் நிலை தேர்வுகள் முடிவு வெளியிடப்பட்டு உள்ள தால் என் போன்றோர் முதன்மை தேர்வுக்கு தகுதிபெற வில்லை. இது போல் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
எனவே உத்தேச வினா-விடை குறித்து என் போன்றோரின் ஆட்சே பனை குறித்து வல்லுநர் குழுவின் இறுதி வினா விடை பட்டியல் வெளியிட வேண்டும், அதன் பிறகு குரூப்-1 முதன்நிலை தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும்.
92 பணியிடங்களுக்கு நடந்த குரூப்-1 முதன் நிலை தேர்வின் முடிவுகள் 28.4.2023 அன்று வெளி யிடப்பட்டது. இந்த முடிவு களுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
தேர்வில் கேட்கப்பட்ட வினாவிற்கான விடைகளை இறுதி செய்யும் வல்லுநர் குழுவை, டி.என்.பி.எஸ்.சி. நியமிக்காமல் உயர்கல்வி துறை நியமிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, வழக்கு குறித்து டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.






