என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இழப்பீடு வழங்க உத்தரவு"

    • தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து கடனாக பெற்று லாரி ஒன்றை வாங்கி தொழில் செய்து வந்துள்ளார்.
    • எவ்வித காரணமும் இல்லா மல் கடந்த 2019 -ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் லாரியை தனியார் நிதி நிறுவத்தினர் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றுவிட்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் நகரில், மோகனூர் ரோட்டில் வசித்து வருபவர் ராமசாமி மகன் தங்கவேல் (வயது 43). இவர் கடந்த 2018-ம் ஆண்டு ரூ.28,25,000-ஐ தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து கடனாக பெற்று லாரி ஒன்றை வாங்கி தொழில் செய்து வந்துள்ளார்.

    ஒவ்வொரு மாதமும் கடனுக்கு செலுத்த வேண்டிய தவணை தொகையை செலுத்தி வந்துள்ளார். இந்த நிலையில், எவ்வித காரணமும் இல்லா மல் கடந்த 2019 -ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் லாரியை தனியார் நிதி நிறுவத்தினர் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றுவிட்டனர்.

    இந்த பிரச்சினை குறித்து தங்கவேல் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தி ருந்தார். அதில், தனியார் நிதி நிறுவனத்தினர், எவ்வித முன் அறிவிப்பும் செய்யா மல், லாரியை பறிமுதல் செய்து எடுத்துச் சென்ற னர். மேலும் ரூ. 30 லட்சம் மதிப்புள்ள பறிமுதல் செய்யப்பட்ட லாரியை, ரூ.7 லட்சத்து 60 ஆயிரத் துக்கு ஏலம் மூலம் விற்பனை செய்துள்ளனர். தன்னிடம் இருந்து லாரியை பறிமுதல் செய்து கொண்ட தால் ஏற்பட்ட இழப்புக்கு ரூ.23 லட்சம் நிவாரணமும், நிதி நிறுவனத்தின் செயல்க ளால் ஏற்பட்ட சிரமங்க ளுக்கு ரூ.5 லட்சம் நிவார ணமும் வழங்க வேண்டும் என்று வழக்கில் தங்கவேல் கேட்டிருந்தார்.நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு, வழக்கு தாக்கல் செய்தவரின் சாட்சியம் மற்றும் ஆவணங்களை பரிசீலனை செய்து வாதங்களை கேட்ட நிலை யில் கடந்த வாரம் தீர்ப்புக்காக வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு உறுப்பினர் ரத்தினசாமி முன்னிலை யில், நீதிபதி ராமராஜ் அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பில், சட்டவிரோதமாக வாக னத்தை நிதி நிறுவனம் பறிமுதல் செய்துள்ளதும், ரூ.30 லட்சம் மதிப்புடைய அந்த லாரியை ரூ.7,60,000-க்கு, விற்பனை செய்துள்ளதும் வழக்கில் நிரூபிக்கப்பட்டது.

    மேலும் தவறான முறை யில் வாகனம் விற்கப்பட்ட பின்னர் பெயர் மாற்றம் செய்யப்படாமலும் இன்சூ ரன்ஸ் புதுப்பிக்கப்படா மலும் வாகனம் பயன்ப டுத்தப்பட்டு வந்துள்ளது என்பதும் வழக்கில் உறுதிப்ப டுத்தப்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட நுகர்வோ ருக்கு தனியார் நிதி நிறுவ னம் ரூ.20 லட்சத்து 80 ஆயிரத்தை, 12 சதவீத வட்டி சேர்த்து வழங்க வேண்டும் என்று நுகர் வோர் கோர்ட்டு சம்மந்தப் பட்ட நிதி நிறுவ னத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

    • டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருபவர் சந்திரசேகரன் (வயது 55). இவருக்கு சொந்தமான லாரியை கடந்த 2019-ம் ஆண்டு அதன் டிரைவர் ஓட்டிச் சென்று, சங்ககிரி அருகே நிறுத்திவிட்டு வீட்டுக்குச் சென்றார்.
    • பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, லாரியை காணவில்லை.

    நாமக்கல்:

    நாமக்கல், சேலம் ரோட்டில் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருபவர் சந்திரசேகரன் (வயது 55). இவருக்கு சொந்தமான லாரியை கடந்த 2019-ம் ஆண்டு அதன் டிரைவர் ஓட்டிச் சென்று, சங்ககிரி அருகே நிறுத்திவிட்டு வீட்டுக்குச் சென்றார்.

    பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, லாரியை காணவில்லை. இது குறித்து சங்ககிரி போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். மேலும், லாரிக்கு இன்சூ ரன்ஸ் செய்யப்பட்டிருந்த, சேலத்தில் உள்ள நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனிக்கு சந்திரசேகரன் தகவல் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் லாரியை கண்டுபிடிக்க இயலவில்லை என்று கோர்ட்டில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்தனர். இதையொட்டி இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பாலிசிபடி, காணாமல் போன லாரிக்கான இன்சூ ரன்ஸ் தொகை ரூபாய் ரூ.15 லட்சத்தை தருமாறு சந்திர சேகரன் கேட்டு வந்துள்ளார்.

    ஆனால் 19 மாதங்கள் கழித்து கடந்த 2021 ஜனவரி மாதத்தில் லாரி டிரைவரின் நம்பிக்கை துரோகத்தால் லாரி காணாமல் போனதாகவும், அதனால் இழப்பீட்டுத் தொகை வழங்க முடியாது என்றும் இன்சூரன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் லாரி உரிமையாளர் சந்திர சேகர், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் கடந்த 2021-ம் ஆண்டில் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில், நேற்று மாவட்ட நுகர்வோர் கோர்ட் உறுப்பினர் ரத்தினசாமி முன்னிலையில் நீதிபதி டாக்டர் ராமராஜ் தீர்ப்பு வழங்கினார். அதில், லாரி உரிமையாளருக்கு பாலிசிபடி முழு இன்சூரன்ஸ் தொகை ரூ.15 லட்சத்தை லாரி காணாமல் போன 2019 ஜூன் மாதம் முதல் வட்டியுடன் சேர்த்து 4 வார காலத்திற்குள் வழங்க வேண்டும்.

    இன்சூரன்ஸ் நிறுவ னத்தின் சேவை குறை பாட்டால் லாரி உரிமையா ளருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்க ளுக்கு இழப்பீடாக ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது. 

    ×