என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீரடி கோவில்"

    • சாயியை தரிசித்து அவர் கிளம்பிய போது அவரை நிறுத்திய சாய் பாபா
    • சரியாக சாய் பாபா கூறிய அந்த மதிய நேரத்தில் ஒரு எருமைமாடு, அந்த பக்தையின் வீட்டிற்கு முன் வந்து நின்றது.

    நம் நாட்டில் எத்தனையோ மகான்கள் வாழ்ந்து மறைந்திருந்தாலும் இன்றும் மக்களால் வழிபடப்படுபவர்கள் ஒரு சிலர் தான். அதிலும் "சீரடியில்" வாழ்ந்து, முக்தி அடைந்த "ஸ்ரீ சாய் பாபாவைப்" பற்றி கேள்விப் படாதவர்கள் இருக்கவே முடியாது.

    இவரது அருளால் தங்களின் பல கஷ்டங்கள் தீர்க்கப்பட்டு மகிழ்வோடு இருக்கும் பக்தர்கள் கோடான கோடி பேர். அப்படி மக்களுக்காக மக்களுடன் வாழ்ந்து முக்தியடைந்த பாபா தன் பக்தன் ஒருவனின் முற்பிறவி ஆசையை நிறைவேற்றிய சம்பவத்தைப் பற்றி இங்கு காண்போம். ஒரு சமயம் "சீரடி" தலத்தில் இருக்கும் "சாய் பாபாவை" தரிசிப்பதற்கு, அவருக்கு முன்னேமே நன்கு பரிட்சயமான ஒரு பக்தை வந்தார்.

    சாயியை தரிசித்து அவர் கிளம்பிய போது அவரை நிறுத்திய சாய் பாபா, அவரிடம் இன்று மதியம் அவர் வீட்டிற்கு ஒரு "எருமைமாடு" விருந்தாளியாக வரப்போவதாகவும், ஆதலால் அது உண்ண "போளிகளை" தயாரிக்குமாறு கூறினார். அதை ஏற்ற அந்த பக்தையும் சாய் பாபா கூறியவாறே, போளிகளை தயார் செய்து வைத்து அந்த எருமைமாட்டிற்காக காத்திருந்தார்.

    சரியாக சாய் பாபா கூறிய அந்த மதிய நேரத்தில் ஒரு எருமைமாடு, அந்த பக்தையின் வீட்டிற்கு முன் வந்து நின்றது. அதைக்கண்டதும் அந்த பக்தை, சாய் பாபா கூறியவாறே அனைத்து போளிகளையும் அந்த எருமைக்கு உண்ணக் கொடுத்தார். அதையெல்லாம் உண்டு முடித்ததும் அந்த எருமை அங்கிருந்து, சற்று தூரம் நடந்து சென்று கீழே விழுந்து இறந்தது.

    இதைக் கண்டதும் அந்த பக்தை திடுக்கிட்டு, நேரே சாய் பாபாவிடம் சென்று இவ்விஷயத்தை கூறினார். அதைக் கேட்ட சாய் பாபா, "இறந்த அந்த எருமைமாடு அதன் முற்பிறவியில் தனது பக்தனாக இருந்ததாகவும், அப்பிறவியில் அந்த பக்தன் இறக்கும் தருவாயில் அவனுக்கு மிகவும் பிடித்த "போளிகளை" உண்ணமுடியாத ஏக்கத்தோடு இறந்து போனதாகவும், இப்போது எருமைமாடாக பிறவியெடுத்திருக்கும் தன் பக்தனின் ஆசையை தான் நிறைவேற்றியதால், அந்த ஆசை நிறைவேறிய மனதிருப்தியோடு அந்த எருமை இறந்து விட்டதாக" கூறினார். இதைக் கேட்ட அந்த பக்தை "எல்லோரின் இம்மையையும், மறுமையையும் அறிந்தவரான" சாய் பாபாவின் கருணையை எண்ணி அவரை உள்ளன்போடு வணங்கினார்.

    • நாணயங்கள் மூட்டை மூட்டையாக குவிந்துவிட்டதால் இனி சீரடி ஆலய நாணயங்களை ஏற்க முடியாது என்று 11 வங்கிகளும் அறிவித்துள்ளன.
    • உண்டியல்களில் உள்ள நாணயங்களை என்ன செய்வது? என்று தெரியாமல் சீரடி ஆலய நிர்வாகிகள் ஆலோசித்து வருகிறார்கள்.

    மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் உலக புகழ்பெற்ற சாய்பாபா ஆலயம் உள்ளது. கோடிக்கணக்கான மக்களின் மனதில் இடம்பிடித்துள்ள சீரடி சாய்பாபாவை வழிபாடு செய்ய தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சீரடியில் குவிந்த வண்ணம் உள்ளனர். அந்த பக்தர்கள் குறிப்பிட்ட தொகை காணிக்கையாக செலுத்துவதும் வழக்கத்தில் உள்ளது.

    அந்த வகையில் நாணயங்களும் அதிக அளவில் சேருகின்றன. அப்படி சேர்ந்த நாணயங்கள் சீரடியில் உள்ள 10 வங்கிகளிலும், நாசிக்கில் உள்ள ஒரு வங்கியிலும் சீரடி ஆலய டிரஸ்ட் சார்பில் சேமிக்கப்படுகிறது. ஆனால் நாணயங்கள் மூட்டை மூட்டையாக குவிந்துவிட்டதால் இனி சீரடி ஆலய நாணயங்களை ஏற்க முடியாது என்று 11 வங்கிகளும் அறிவித்துள்ளன.

    இதனால் உண்டியல்களில் உள்ள நாணயங்களை என்ன செய்வது? என்று தெரியாமல் சீரடி ஆலய நிர்வாகிகள் ஆலோசித்து வருகிறார்கள்.

    • புராண காலத்துக்கு முன்பு சீரடி கோவிலின் ஆண்டு வருமானம் ரூ.800 கோடியை தொட்டிருந்தது.
    • சீரடி ஆலயம் சார்பில் பல்வேறு வங்கிகளில் ரூ.2,500 கோடிக்கு மேல் பணம் முதலீடு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    மகாராஷ்டிரா மாநிலம் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. இதனால் திருப்பதிக்கு இணையாக அந்த கோவிலிலும் உண்டியல் வசூல் அதிகரித்து வருகிறது. தினமும் 60 ஆயிரம் முதல் சுமார் 70 ஆயிரம் பக்தர்கள் அந்த ஆலயத்துக்கு வந்து செல்வதாக கணக்கிடப்பட்டுள்ளது. புராண காலத்துக்கு முன்பு சீரடி கோவிலின் ஆண்டு வருமானம் ரூ.800 கோடியை தொட்டிருந்தது.

    இந்த நிலையில் 2022-23-ம் ஆண்டு தற்போது அது ரூ.900 கோடியை கடந்துள்ளது. அடுத்த ஆண்டு இது ஆயிரம் கோடியை தாண்டும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள். சீரடி ஆலயம் சார்பில் பல்வேறு வங்கிகளில் ரூ.2,500 கோடிக்கு மேல் பணம் முதலீடு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ×