என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாக்கும் அபாயம்"

    • ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது.
    • பட்டுப்புழுக்களுக்கு பிளாச்சரி என்னும் நோய் தாக்கும் அபாயம்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் மொடக்குறிச்சி, பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பட்டுப்புழு வளர்ப்பு நடைபெற்று வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பட்டுக்கூடுகள் தர்மபுரி மற்றும் கர்நாடக மாநிலம் ராம்நகர் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

    இந்நிலையில் தற்போது ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. வெயில் கொடுமையால் பட்டுப்புழுக்களுக்கு பிளாச்சரி என்னும் நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் உற்பத்தி இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து பட்டு வளர்ச்சி துறை அதிகாரிகள் கூறியதாவது:

    ஈரோடு மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் மிக கடுமையாக உள்ளது. பட்டுப்புழுக்களை பொருத்த வரை சீதோஷ்ன நிலையானது சீராக இருக்க வேண்டும்.

    தற்போது நிலவி வரும் வெயில் காரணமாக பட்டுப்பு ழுக்களுக்கு பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண் கிருமிகளினால் பாதிப்பு ஏற்பட்டு பட்டுக்கூடு உற்பத்தி குறைந்த விடும். பாக்டீரியா வால் ஏற்படும் பிளாச்சரி எனப்படும் நோயானது கோடை காலத்தில் அதிகம் தாக்கும்.

    எனவே கோடைகால புழு வளர்ப்பில் விவசாயிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

    வாடிய இலையினை புழுக்களுக்கு உணவாக கொடுக்கக் கூடாது. சரியான காற்றோட்ட வசதி இருக்க வேண்டும். புழுக்கள் வளர்ப்பு அறையில் கிருமி நாசினி மருந்துகளை சரியான அளவில் பயன்படுத்த வேண்டும்.

    வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க புழு வளர்ப்பு அறையில் மேற்கூரை தென்னை, பனை ஓலைகளால் அமைக்க வேண்டும்.

    பட்டுப்புழுக்கள் வளர்ப்பு அறையில் குளிர்ச்சி நிலவும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். இதேப்போல தோலுரிப்பு நிகழ்வு நடந்ததும் உரிய நேரத்தில் புழுக்களுக்கு உணவு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×