என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேர்க்கை படிவம்"

    • சேர்க்கை படிவங்களை உடுமலை கே .ராதாகிருஷ்ணன் நிர்வாகிகளுக்கு வழங்கினார்.
    • எஸ் .எம். நாகராஜ், வி .ஆர். வி. வேலுச்சாமி உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள சட்டமன்ற அலுவலகத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தலின் பேரில் அ.தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை படிவங்களை முன்னாள் அமைச்சரும் உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை கே .ராதாகிருஷ்ணன் நிர்வாகிகளுக்கு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் உடுமலை நகர செயலாளர் ஹக்கீம், குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் பிரனேஷ் மற்றும் முருகேசன், அன்புராஜன், பொள்ளாச்சி ஒன்றிய செயலாளர்கள் ஆவல்பட்டி நடராஜ், இளஞ்செழியன், சோமசுந்தரம் ,சின்ன பாலு, பேரூராட்சி செயலாளர்கள் நரி முருகன் ,சுந்தர்ராஜ், எஸ்.கே., சித்ரா, பல்லடம் ஒன்றிய செயலாளர் சித்தி ராஜ், பொங்கலூர் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, சிவப்பிரகாசம் ,மாவட்ட ஆவின் சேர்மன் வழக்கறிஞர் மனோகரன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் துபாய் ஆறுமுகம் ,அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் எஸ் .எம். நாகராஜ், வி .ஆர். வி. வேலுச்சாமி உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×