என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "1 டன் ரேசன் அரிசி பறிமுதல்"

    • டிரைவர் உள்பட 2 பேர் கைது
    • வாணிப கழக கிடங்கில் மீட்கப்பட்ட அரிசி ஒப்படைப்பு

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அருகே பச்சூர் வழியாகவெளி மாநிலத்திற்கு ரேசன் அரிசி கடத் தப்படுவதாக திருப்பத்தூர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசா ருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பே ரில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பச்சூர் பகுதிக்கு விரைந்து சென்று வாகன சோதனை செய்தனர்.

    அப்போது சந்தேகத்தின் பேரில் வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரேசன் அரிசிவெளி மாநிலத்திற்கு கடத்தியது தெரியவந்தது.

    இதனையடுத்து காரில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை செய்ததில் அவர்கள் வாணியம்பாடி அடுத்த ஆவரங்குப்பம் பகுதியைச் சேர்ந்த தாஸ் என்பவரது மகன் சந்தோஷ் (வயது 33), நாட்டறம்பள்ளி அருகே உள்ள முத்தனப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சீனன் என்பவரது மகன் ஏழு மலை (36) என தெரிய வந்தது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து டிரைவர் உள்பட 2 பேரையும் கைது செய்தனர்.

    ஒரு டன் ரேசன் அரிசியை காருடன் பறிமுதல் செய்தனர்.

    பறி முதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி வாணிப கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

    • தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர்
    • தாமலேரிமுத்தூர் கிராமத்தில் ரேசன் கடை அமைக்க வேண்டும் என கோரிக்கை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே தாமலேரிமுத்தூர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் ரேசன் பொருட்களை வாங்குவதற்கு கட்டேரி அருகே உள்ள தாமலேரிமுத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு செல்கின்றனர்.

    இதனால் நீண்டதூரம் சென்று ரேசன் பொருட்களை வாங்கி வருவதால் தாமலேரி முத்தூர் கிராமத்தில் ரேசன் கடை அமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று திருப்பத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் திருமலை உள்ளிட்ட அதிகாரிகள் ரேசன் கடை அமைக்க இடம் தேர்வு குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    பின்னர் அதிகாரிகள் அலுவலகத்திற்கு திரும்பி சென்றனர்.

    அப்போது தாமலேரிமுத்தூர் அருகே உள்ள பாட்டாளி நகர் என்ற இடத்தில் இருந்த வைக்கோல் போரை சந்தேகத்தின் பேரில் வட்ட வழங்கல் அலுவலர் திருமலை உள்ளிட்டோர் சோதனை மேற்கொண்டனர்.

    அதில் வெளி மாநிலத்திற்கு கடத்த 27 மூட்டைகளில் 1010 கிலோ ரேசன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    இதனை பதுக்கி வைத்த மர்ம கும்பல் குறித்து விவரம் தெரியவில்லை. இதனால் துறை அதிகாரிகள் ரேசன் அரிசியை பறிமுதல் செய்து திருப்பத்தூர் அடுத்த குனிச்சியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர்.

    ×