என் மலர்
நீங்கள் தேடியது "பொது வினியோக திட்ட"
- பொது வினியோக திட்ட குறைதீர் முகாம் நாளை (சனிக்கிழமை) 10 தாலுகாவிலும் நடை பெறவுள்ளது
- ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், செல்போன் எண் இணைத்தல் மற்றும் மாற்றம் செய்தல் உள்ளிட்டவை தொடர்பாக கோரிக்கை மனுக்கள் வழங்கித் தீர்வு பெறலாம்
ஈரோடு மாவட்டத்தில் பொது வினியோக திட்ட குறைதீர் முகாம் நாளை (சனிக்கிழமை) 10 தாலுகாவிலும் நடை பெறவுள்ளது.
அந்தந்தத் தாலுகா பகுதிக்கு உட்பட்ட 1 இடத்தில் உள்ள ரேஷன் கடையில் காலை 10 மணிக்கு இக்குறைதீர் முகாம் நடைபெறும்.
இதில் பொதுமக்கள், புதிய ரேஷன் கார்டு பெறுதல், நகல் ரேஷன் கார்டு பெறுதல், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், செல்போன் எண் இணைத்தல் மற்றும் மாற்றம் செய்தல் உள்ளிட்டவை தொடர்பாக கோரிக்கை மனுக்கள் வழங்கித் தீர்வு பெறலாம்.
அதன்படி, ஈரோடு தாலுகாவில், வில்லர சம்பட்டி பல்நோக்கு சமுதா யக் கூடம், பெருந்துறை– பணிக்கம்பாளையம், மொடக்குறிச்சி – கனகபுரம், கொடுமுடி – ஊ.கொளத்து ப்பாளையம், கோபி – குள்ளநாயக்கனூர், நம்பியூர் – சாந்திபாளையம், பவானி – பனங்காட்டூர், அந்தியூர் – வெள்ளிதிருப்பூர், சத்திய மங்கலம் – அரியூர், தாளவாடி– தொட்டகாஜனூர் ஆகிய ரேஷன் கடைகளில் இக்குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது.






