என் மலர்
நீங்கள் தேடியது "விடுமுறை தினத்திலும்"
- மதுபான கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.
- மதுப்பிரியர்களை செல்போனில் தொடர்பு கொண்டு இருக்கும் இடத்திற்கு நேரில் சென்று விற்பனை செய்கின்றனர்.
அம்மாபேட்டை,
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று டாஸ்மாக் மதுக்கடைகள் விடுமுறை விடப்பட்டது.ஆனால் அம்மாபேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் மது விற்பனை நடைபெற்றது.
வழக்கமான நாட்களில் டாஸ்மாக் மதுபான கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். மேலும் முக்கிய அரசு விடுமுறை தினங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படும்.
இதுகுறித்து அம்மாபேட்டை சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் கூறுகையில் அம்மாபேட்டை,பூதப்பாடி,,மாணிக்கம்பாளையம், கோனேரிப்பட்டி பிரிவு,பூனாட்சி முளியனூர், குருவரெட்டியூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் உள்ளன.
இந்தக் கடைகள் நேற்று மூடப்பட்டிருந்த போதிலும் கடைகளின் அருகிலேயே மறைவான பகுதிகளில் மது விற்பனை காலை 8 மணி முதல் இரவு வரை நடைபெற்று வந்தது. அது மட்டுமின்றி குறிச்சி சைபன் வாய்க்கால் கரைப்பகுதிகளிலும், சீலம்பட்டி, சிங்கம்பேட்டை உள்ளிட்ட வாய்க்கால்கரை பகுதிகளிலும் அங்காங்கே மறைவான பகுதிகளில் மது விற்பனை நடைபெற்று வருகிறது.
மேலும் சிலர் தங்களது மோட்டார் சைக்கிள்களில் பதுக்கி வைத்து மதுப்பிரியர்களை செல்போனில் தொடர்பு கொண்டு இருக்கும் இடத்திற்கு நேரில் சென்று விற்பனை செய்கின்றனர்.
என்னதான் டாஸ்மாக் கடைகளுக்கு அரசு நேரக் கட்டுப்பாடுகள் விதித்தாலும் விடுமுறை என அறிவித்தாலும் இப்பகுதிகளில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெற்று தான் வருகிறது.
கண்ட இடங்களில் மது விற்பனை நடைபெறுவதால் மதுவினை குடித்துவிட்டு ஆங்காங்கே பாட்டில்களை வீசி செல்கின்றனர். இதனால் பாட்டில்கள் உடைந்து இரு சக்கர வாகனங்களில் பஞ்சர் ஆவது, நடந்து செல்லும் கூலி தொழிலாளர்கள் காலில் குத்தி ரத்த காயம் ஏற்படுகிறது.
மேலும் பள்ளி,கல்லூரி மாணவிகள், பெண்கள் ரோட்டில் செல்லும்போது மது பாட்டில்கள் கண்ட இடங்களில் இருப்பதை கண்டு முகம் சுழித்து செல்கின்றனர்.
இதை தவிர்க்க அதிகாரிகள் முறையான அனுமதியின்றி விற்பனை செய்யும் மது விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.






