என் மலர்
நீங்கள் தேடியது "The boy died. சிறுவன் சாவு"
- வீரனூர் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகன் ரித்தீஷ் (வயது 10). இவன் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.
- இந்த நிலையில் சம்பவத்தன்று ரித்தீசுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த குஞ்சாண்டியூர் அருகே உள்ள வீரனூர் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகன் ரித்தீஷ் (வயது 10). இவன் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் சம்பவத்தன்று ரித்தீசுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து பெற்றோர் அவனை மேட்டூர் அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் ரித்தீஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்டு பெற்றோர் கதறி துடித்தனர்.
மேலும் இது குறித்து ரித்தீஷ் தந்தை சரவணன், கருமலைகூடல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- பேரரசு (வயது 6). சம்பவத்தன்று, சிறுவன் பேரரசு வீட்டின் மொட்டை மாடியில் விளையாடி கொண்டிருந்தான்.
- எதிர்பாராத விதமாக மொட்டை மாடியில் இருந்து திடீரென தவறி விழுந்தான்.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே பெரியவடகம்பட்டி அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் அன்பரசன். இவரது மகன் பேரரசு (வயது 6). சம்பவத்தன்று, சிறுவன் பேரரசு வீட்டின் மொட்டை மாடியில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக மொட்டை மாடியில் இருந்து திடீரென தவறி விழுந்தான்.
இதில் படுகாயம் அடைந்த சிறுவனை, உடனடியாக மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, நேற்று சிறுவன் பேரரசு பரிதாபமாக உயிரிழந்தார். இதை பார்த்த பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






