என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீரப்பன்கோவில்"

    • தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களின் வருகையால் இங்குள்ள இளைஞர்களின் வேலை வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
    • திரைப்படங்களில் நடிகைகளுடன் டூயட் பாடிவிட்டு பின்னர் அரசியலில் புகுந்து முதலமைச்சர் ஆகிவிடலாம் என சிலர் கனவு காண்கின்றனர்.

    சின்னாளபட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் நடந்த தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில், அக்கட்சியின் தலைமைக்குழு உறுப்பினரும், வீரப்பனின் மனைவியுமான முத்துலட்சுமி கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

    எனது கணவர் வீரப்பன் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தமிழக அரசு மணிமண்டபம் கட்டித்தர வேண்டும். இதற்காக அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அமைச்சர்களை சந்தித்து மனு அளிக்க உள்ளேன். தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களின் வருகையால் இங்குள்ள இளைஞர்களின் வேலை வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது. குறைந்த சம்பளத்திற்கு வடமாநில தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தி உள்ளூர் வாலிபர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

    திரைப்படங்களில் நடிகைகளுடன் டூயட் பாடிவிட்டு பின்னர் அரசியலில் புகுந்து முதலமைச்சர் ஆகிவிடலாம் என சிலர் கனவு காண்கின்றனர். இதுபோன்ற நபர்களிடம் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பா.ஜ.க. பல்வேறு மாநிலங்களில் சிறு சிறு கட்சிகளை அழித்து அவற்றை தன்னுடன் இணைத்துக் கொண்டது போல தமிழகத்திலும் கட்சிகளுடன் கூட்டணி பேச்சு வார்த்தையை நடத்தி வருகிறது. அந்த கட்சியுடன் கூட்டணி சேரும் கட்சிகளுக்கு எதிர்காலம் இருக்காது என்பதை உணர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சங்கையா சந்தி வீரப்பன்கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • விழா ஏற்பாடுகளை சங்கையா சந்தி வீரப்பன் கோவில் திருப்பணி கமிட்டியினர் செய்திருந்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள தென்கரை கிராமத்தில் சங்கையா சந்தி வீரப்பன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. மதுரை கணபதி பட்டர் தலைமையில் யாகவேள்வி நடந்தது. திருப்பணி கமிட்டி தலைவர் பிரசன்னா மூர்த்தி, செயலாளர் பரந்தாமன், பொருளாளர் நீதிவளவன், பரம்பரை பூசாரி தினகரன், ரமணன் ஆகியோர் மேளதாளத்துடன் புனித நீர் குடங்களை எடுத்து கோவிலை வலம் வந்தனர். இதைத்தொடர்ந்து சங்கையா சந்திவீரப்பன் உள்பட அங்காள பரமேசுவரி சங்கிலி கருப்பன் சுவாமிக்கு கும்பாபிஷேகம் நடந்தது.

    பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை சங்கையா சந்தி வீரப்பன் கோவில் திருப்பணி கமிட்டியினர் செய்திருந்தனர்.

    ×