என் மலர்
நீங்கள் தேடியது "கடும் கண்டனம்"
- அரசியல் நடத்தி அரசுக்கு சவால் விடும் அண்ணாமலையை உடனே கைது செய்ய வேண்டும்.
- பசும்பொன் பாண்டியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதுரை
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் பாது காப்பாக உள்ளனரா? என்று கண்டறிய பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் இருந்து 8 பேர் அடங்கிய அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்து வடமாநில தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் எந்த அச்சுறுத்தலும் கிடையாது என்றும், தமிழ்நாட்டில் பாதுகாப்பாக உள்ளனர் என்றும், தமிழ்நாட்டு மக்கள் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கி வருகிறார்கள் என்று கூறி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் வெறுப்பு அரசியலை நடத்தி இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் எதிராக செயல்படும் பா.ஜ.க.வின் தமிழக தலைவர் அண்ணாமலை தேவையற்ற கருத்துக்களை பேசி வருகிறார்.
மொழிப் பிரச்சினையை உருவாக்கி அதன்மூலம் வதந்தியை பரப்பி அச்சத்தை உருவாக்கி தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு கலவர சூழ்நிலை உருவாக வேண்டும் என்று தப்பு கணக்கு போடுகிறார் அண்ணாமலை.
பெரியார் மண்ணான திராவிட பூமியில் பா.ஜ.க.வின் கனவும் அண்ணாமலையின் கனவும் ஒருபோதும் பலிக்காது. வீண் ஜாம்பவானாக அறிக்கை அரசியல் நடத்தும் அண்ணாமலையை உடனே கைது செய்து சிறையில் அடைக்க வேண்டுமென வேண்டுகிறேன். ஏனெனில் ஆதிக்க இந்தியை எதிர்ப்பதும் அன்னை தமிழை காப்பதும் திராவிட இயக்கங்களின், தமிழக மக்களின் தலையாய கொள்கையாகும்.
வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு. ஆகவே திராவிட மாடல் அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பார்போற்றும் திராவிட மாடல் அரசை திறம்பட இந்திய ஒன்றியமே திரும்பிப்பார்க்கும் திராவிட மாடல் அரசை நடத்தி வருகிறார். இதற்கு சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் கலகம் விளைவித்திட முயற்சி செய்யும் அண்ணாமலை, சீமான் போன்றவர்களை தமிழக காவல்துறை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். கைது






