என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீத்தடுப்பு"

    • ஆத்தூர் கோட்ட வனத்துறை சார்பில், புழுதிக்குட்டை மத்திய நாற்றங்கால் வளா–கத்தில் தீத்தடுப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.
    • வாழப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் பெரிய–சாமி, காட்டுத் தீத்தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தீயணைப்பு முறை குறித்து பயிற்சி அளித்தார்.

    வாழப்பாடி:

    கோடை காலம் நெருங்கி வரும் நிலையில், வனப்பகுதியில் காட்டுத் தீ ஏற்படுவதை தடுக்கவும், தீயணைப்பு முன்னேற்பா–டுகள் குறித்தும் வனத்துறை களப்பணியாளர்கள், வனக்குழு தலைவர்கள், உறுப்பினர்கள், தன்னார்வ–லர்களுக்கு, தீயணைப்பு துறையுடன் இணைந்து பயிற்சி அளிக்க அறிவுறுத்–தப்பட்டு உள்ளது.

    அதன்படி ஆத்தூர் கோட்ட வனத்துறை சார்பில், புழுதிக்குட்டை மத்திய நாற்றங்கால் வளா–கத்தில் தீத்தடுப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

    இப்பயிற்சி முகாமிற்கு, ஆத்தூர் கோட்ட உதவி வன பாதுகாவலர் முருகன் தலைமை வகித்தார். தும்பல் வனச்சரகர் விமல் குமார் வரவேற்றார்.

    வாழப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் பெரிய–சாமி, காட்டுத் தீத்தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தீயணைப்பு முறை குறித்து பயிற்சி அளித்தார்.

    பயிற்சி முகாமில், ஆத்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட வனச்சரக அலுவலர்கள் உள்ளிட்ட வனத்துறை களப்பணி–யாளர்கள், வனக்குழு தலைவர், உறுப்பினர்கள், தன்னார்வர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    ×