என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைக்கோல் தீ"

    • தீ முழுவதும்பற்றி எரிந்ததால் வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே வந்தனர்.
    • தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் அருகில் இருந்த டிரான்ஸ்பார்மர் மற்றும் வீடுகளில் பாதிப்பு ஏற்படவில்லை.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த பெருவாயல் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் வீட்டின் அருகே வைக்கோல்போர் வைத்துஇருந்தார். அதன் அருகியே மின்கம்பம் இருந்தது. இந்த நிலையில் மின்கம்பிகள் உரசியதில் தீப்பொறி பறந்து

    வைக்கோல்போர் மீது விழுந்து தீப்படித்தது. தீ முழுவதும்பற்றி எரிந்ததால் வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே வந்தனர். தகவல் அறிந்ததும் பொன்னேரி தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்த வந்து தீயை அணைத்தனர். தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் அருகில் இருந்த டிரான்ஸ்பார்மர் மற்றும் வீடுகளில் பாதிப்பு ஏற்படவில்லை.

    • டிராக்டரில் மின்கசிவு ஏற்பட்டு வைக்கோல் தீப்பற்றி எரிய தொடங்கியது.
    • உத்தரமேரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    உத்திரமேரூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த மலையாங்குளம் கிராமத்தில் சேலத்தை சேர்ந்த ரமேஷ் (வயது40) என்பவர் கடந்த 15 நாட்களாக நெற்பயிரை அறுவடை செய்து வந்தார். பணி முடிவடைந்த நிலையில் அறுவடை செய்த வைக்கோலை தனது டிராக்டரில் ஏற்றிக்கொண்டு சேலம் செல்வதற்காக ரமேஷ் உத்திரமேரூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    குண்ணவாக்கம் கூட்ரோடு அருகே வந்தபோது டிராக்டரில் மின்கசிவு ஏற்பட்டு வைக்கோல் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதை பார்த்த ரமேஷ் டிராக்டரில் இருந்து கீழே இறங்கினார். இதை பார்த்த அந்த பகுதி மக்கள் உத்திரமேரூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அங்கு கரும்புகை சூழ்ந்தது. இதுகுறித்து உத்தரமேரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×