என் மலர்
நீங்கள் தேடியது "ரூ.32 ஆயிரத்துக்கு"
- சுவாமி கையில் அணிவிக்கப்பட்டு இருந்த வெள்ளி மோதிரத்தை பக்தர் ஒருவர் ஏலம் எடுத்தார்.
- அனைத்து பக்தர்களுக்கும் வாழைப்பழம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
சிவகிரி:
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளக்கேத்தி, புது அண்ணாமலை பாளை யத்தில் பழந்தின்னி கருப்ப ண்ண ஈஸ்வர் என்ற பெயரில் சித்தர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மகா சிவராத்திரி விழா தொடங்கி நடந்து வருகிறது.
இைதயொட்டி பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து சாமிக்கு அபிசேகம் செயய்யப்பட்டது. இதை தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து சாமிக்கு 1008 வாழைப்பழ ங்கள் படைத்து பூஜை செய்யப்பட்டது.
இரவு கோவிலில் 108 இலைகளில் பச்சைபயறு பரிமாறி பெரிய பூஜை செய்யப்பட்டது. விழாவைக் காண வந்திருந்த ஆயிரக்க ணக்கான பக்தர்க ளுக்கு அன்ன தானம் வழங்கப்ப ட்டது.
இதை தொடர்ந்து பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வர் முன்பு பூஜையில் வைக்கப்பட்ட எலுமிச்சை பழம் ஏலம் விடப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு எலுமிச்சை பழத்தை ஏலம் எடுக்க போட்டி போட்டனர்.
இதை தொடர்ந்து முடிவில் பக்தர் ஒருவர் ரூ.21 ஆயிரத்துக்கு ஒரு எலுமிச்ைச பழத்தை ஏலம் எடுத்தார். அதை தொடர்ந்து சாமி நெற்றியில் வைக்க ப்பட்ட 10 கிராம் வெள்ளி க்காசை மற்றொரு பக்தர் ரூ.27 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்தார்.
அதேபோல் சுவாமி கையில் அணிவிக்கப்பட்டு இருந்த 15 கிராம் எடை யுள்ள வெள்ளி மோதிரத்தை பக்தர் ஒருவர் ரூ.32 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தார்.
விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் வாழைப்பழம் பிரசாதமாக வழங்கப்பட்டது.






