என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரதநாட்டிய நிகழ்ச்சி"

    • குழந்தைகளின் கண்கவர் பரதநாட்டிய நிகழ்ச்சி, விருது வழங்கும் விழா நடைபெற்றது.
    • பங்கு பெற்ற அனைத்து குழந்தைகளுக்கும் கேடயமும் சான்றிதழும் பரிசும் வழங்கப்பட்டது.

    மத்தூர்,

    ஊத்தங்கரை ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோவிலில் சிவராத்திரி விழா நடைபெற்றது. அலங்கார ஆராதனைகளுக்கு பின்னர் பிரசாதங்கள் விநியோகிக்கபட்டது.

    அலங்கரிக்கப்பட்ட ரகத்தில் ஸ்ரீதேவி, பூமி நீளாதேவி சமேத கோவிந்த வரதராஜ பெருமாள், மகாலட்சுமி தாயார் ,ஆஞ்சநேய சாமி திருவீதி உலா வந்தனர்.

    சிவராத்திரியை ஒட்டி வேதபாராயணங்கள், முதல் காலத்தில்பால் அபிஷேகமும், சந்திரமௌலீஸ்வரர் அலங்கார காட்சியும், ஊத்தங்கரை குரு நாட்டியாலயா குழந்தைகளின் கண்கவர் பரதநாட்டிய நிகழ்ச்சி, விருது வழங்கும் விழா நடைபெற்றது.

    ரோஷினி சிவாவுக்கு நாட்டிய கலைமணி விருதும் ,கேடயமும், சான்றிதழும், பரிசும், அதனை தொடர்ந்து நட்டு வாங்க கலைமணி ஆசிரியை வீரலட்சுமிக்கு நாட்டியதாரகை விருதும், கேடயமும், சான்றிதழும், பரிசும், தொடர்ந்து நாட்டிய நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அனைத்து குழந்தைகளுக்கும் கேடயமும் சான்றிதழும் பரிசும் வழங்கப்பட்டது.

    யோகா ஆசிரியை வித்யாவிற்கு யோக கலைமணி சுடர் விருதும் சான்றிதழும் கேடயமும் வழங்கப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு இரண்டாம் காலம் 151 இளநீர் அபிஷேகம், மூன்றாம் காலத்தில் வாசனை திரவியங்கள் மற்றும் விபூதி அபிஷேகம், நான்காம் காலத்தில் பால் உள்ளிட்ட சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடைபெற்றது.

    பின்னர் அலங்கரிக்கப்பட்ட ரகத்தில் பார்வதி தாயார் உடனுறை சந்திரமவுலீஸ்வரர் திருவீதி உலா வந்தார்.

    • சலங்கை விழாவில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அதியமான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சலங்கை விழாவில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி.திருமால் முருகன் தலைமை தாங்கினார். பின்னர் அதியமான் கல்வி நிறுவனங்களின் செயலர் ஷோபா திருமால் முருகன், அதியமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் சீனி.கலைமணி சரவணகுமார், துணை முதல்வர் அபிநயா கணபதி ராமன் மற்றும் அதியமான் பப்ளிக் பள்ளி முதல்வர் லீனா ஜோஸ் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றினார்கள்.

    இறுதியாக பரத நிகழ்சியில் பங்குபெற்ற மாணவிகளுக்கு அதியமான் கல்வி நிறுவனங்க ளின் நிர்வாக அலுவலர் கணபதி ராமன் நினைவு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். இவ்விழாவில் ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். முடிவில் பரதநாட்டிய ஆசிரியர் ஸ்ரீதரன் நன்றி கூறினார்.

    ×