என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளியில் சலங்கை விழா
    X

    பள்ளியில் சலங்கை விழா

    • சலங்கை விழாவில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அதியமான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சலங்கை விழாவில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி.திருமால் முருகன் தலைமை தாங்கினார். பின்னர் அதியமான் கல்வி நிறுவனங்களின் செயலர் ஷோபா திருமால் முருகன், அதியமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் சீனி.கலைமணி சரவணகுமார், துணை முதல்வர் அபிநயா கணபதி ராமன் மற்றும் அதியமான் பப்ளிக் பள்ளி முதல்வர் லீனா ஜோஸ் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றினார்கள்.

    இறுதியாக பரத நிகழ்சியில் பங்குபெற்ற மாணவிகளுக்கு அதியமான் கல்வி நிறுவனங்க ளின் நிர்வாக அலுவலர் கணபதி ராமன் நினைவு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். இவ்விழாவில் ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். முடிவில் பரதநாட்டிய ஆசிரியர் ஸ்ரீதரன் நன்றி கூறினார்.

    Next Story
    ×