என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருங்காலி மரக்கட்டைகள்"

    • வாலிப்பாறை பகுதியில் இருந்து கருங்காலி மரக்க ட்டைகள் கடத்தப்படுவதாக வருசநாடு வனத்துறையி னருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • 23 கருங்காலி மரக்கட்டைகளை பறிமுதல் செய்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு அருகே வாலிப்பாறை பகுதியில் இருந்து கருங்காலி மரக்க ட்டைகள் கடத்தப்படுவதாக வருசநாடு வனத்துறையி னருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் வனச்சரகர் கண்ணன் தலைமையில் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வாலிப்பாறையில் இருந்து தும்மக்குண்டு பகுதிக்கு வேகமாக மினி வேன் வந்தது. அதனைத் நிறுத்தி வனத்துறையினர் சோதனை நடத்தினர்.

    அப்போது வேனில் 23 கருங்காலி மரக்கட்டைகள் கடத்தியது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து டிரைவர் அரசு (வயது38), வனராஜ் (50) ஆகிய 2 பேரை கைது செய்து கருங்காலி மரக்கட்டைகள் மற்றும் மினி வேனை பறிமுதல் செய்தனர்.

    ×