என் மலர்
நீங்கள் தேடியது "பக்தர்கள் மறியல்"
- போக்குவரத்து நெரிசலை சரி செய்து கொண்டிருந்த போலீஸ்காரர் சம்பந்தப்பட்ட டிரைவரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
- போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட மேல் மருவத்தூர் பக்தர்களிடம் சமரச பேச்சு நடத்தி சாலை மறியலை கைவிட செய்தனர்.
மதுராந்தகம்:
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே ஆத்தூர் சுங்கச்சாவடியில் ஓசூரில் இருந்து மேல் மருவத்தூர் கோவிலுக்கு தனியார் பஸ்சில் பக்தர்கள் வந்துள்ளனர்.
அப்போது காலையில் ஏற்பட்ட சாலை விபத்தை சரி செய்யும் பணியில் நெடுஞ்சாலை ரோந்து போலீசார், அச்சரப்பாக்கம் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
போக்குவரத்து நெரிசல் காரணமாக டிரைவர் ஹாரன் அடித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து போக்குவரத்து நெரிசலை சரி செய்து கொண்டிருந்த போலீஸ்காரர் சம்பந்தப்பட்ட டிரைவரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
அப்போது போலீஸ்காரர் டிரைவரை தகாத வார்த்தையால் பேசி திட்டியதால் பஸ்சில் வந்த பக்தர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஏற்கனவே ஆத்தூர் அடுத்துள்ள தொழுப்பேடு பகுதியில் நடைபெற்ற விபத்தின் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், சாலை மறியலால் மீண்டும் போக்குவரத்து நெரிசல் பாதித்தது.
போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட மேல் மருவத்தூர் பக்தர்களிடம் சமரச பேச்சு நடத்தி சாலை மறியலை கைவிட செய்தனர். இதனால் ஒரு மணி நேரத்துக்கு போக்கு வரத்து பாதித்தது.






