என் மலர்
நீங்கள் தேடியது "பேருந்து சிறைபிடிப்பு"
- தனியார் பேருந்துகள் அன்றாடம் நின்று செல்வது வழக்கம்.
- கிருஷ்ணகிரி செல்லும் தனியார் பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தருமபுரி,
தருமபுரி- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பழைய தருமபுரி பேருந்து நிறுத்தத்தில் தனியார் பேருந்துகள் அன்றாடம் நின்று செல்வது வழக்கம்.
இந்த வழியாக சென்னை,பெங்களூரு, ஆந்திரா, ஓசூர், கிருஷ்ணகிரி, பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, மாரண்டஹள்ளி, உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் சென்று வருகின்றன.
இந்நிலையில் வெளியூர்களில் வேலை செய்யும் பழைய தருமபுரி மக்கள் பொங்கல் பண்டிகைக்கு விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்தனர்.
பண்டிகை முடிந்து மீண்டும் வேலைக்காக வெளியில் செல்லும் மக்கள் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக நின்றிருந்த பொழுது அந்த வழியாக வந்த தனியார் பேருந்துகள் நிற்காமல் செல்வதால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் தருமபுரி- கிருஷ்ணகிரி செல்லும் தனியார் பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த மதிகோண்பாளையம் காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இனிவரும் காலங்களில் பேருந்துகள் பழைய தருமபுரி பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்லும் என உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
- தனியார் பேருந்துகள் பல, பெரும்பாலும் பல்லக்காபாளையம் ஊருக்குள் செல்லாமல், சேலம் கோவை புறவழிச்சாலை வழியாக சென்று விடுகிறது.
- இதனால் இந்த கிராமத்தில் இருந்து பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவியர், பல முக்கிய வேலையாக செல்லும் பொதுமக்கள் என பல தரப்பினர் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் கிராமம் உள்ளது. குமாரபாளையம் நகரில் இருந்து சேலம் செல்லும் தனியார் பேருந்துகள் பல, பெரும்பாலும் பல்லக்காபாளையம் ஊருக்குள் செல்லாமல், சேலம் கோவை புறவழிச்சாலை வழியாக சென்று விடுகிறது.
இதனால் இந்த கிராமத்தில் இருந்து பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவியர், பல முக்கிய வேலையாக செல்லும் பொதுமக்கள் என பல தரப்பினர் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று பகலில் சேலம் செல்வதற்காக பவானியில் இருந்து தனியார் பேருந்து ஒன்று பல்லக்காபாளையம் புறவழிச்சாலை வழியாக சேலம் சென்றது. உடனே பொதுமக்கள் சாலையின் குறுக்கே நின்று, பேருந்தை தடுத்து நிறுத்தி சிறைபிடித்தனர்.
நடத்துனர், ஓட்டுனரிடம் இது குறித்து வாக்குவாதம் செய்து முற்றுகை போராட் டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தவழியாக போக்கு வரத்து பாதித்தது. சாலையில் செல்ல முடியாமல் பல வாகனங்கள் வரிசையாக நின்றன.
இது குறித்து தகவலறிந்த குமாரபாளையம் போலீசார், மறியல் நடந்த பகுதிக்கு நேரில் சென்று பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். இனி பேருந்து ஊருக்குள் வர நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி கூறினர். இதையடுத்து, பொதுமக்கள் பேருந்தை விடுவித்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக சுமார் 1 மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.






