என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறைத் தண்டனை"

    • வீட்டின் பூட்டை உடைத்து 2022 அக்டோபா் 7ஆம் தேதி 27 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
    • வழக்கு விசாரணை கூடலூா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சியில் உள்ள மைசூா் மரப்பாலம் மங்குழி பகுதியில் வசிக்கும் கிருஷ்ணன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 2022 அக்டோபா் 7ஆம் தேதி 27 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.

    இது தொடா்பாக கூடலூா் போலீஸாா் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி கா்நாடக மாநிலம், மைசூரு பகுதியைச் சோ்ந்த மது (23), கேரளம் மாநிலம், மாநந்தவாடி பகுதியைச் சோ்ந்த மனு (20), அவரின் தாயாா் லதா (38) ஆகியோரைக் கைது செய்தனா்.

    இந்த வழக்கு விசாரணை கூடலூா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சசின்குமாா் மூன்று பேருக்கும் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்

    ×