என் மலர்
நீங்கள் தேடியது "சென்னிமலை மலை பாதையில்"
- 3 ஆயிரம் இரு சக்கர வாகனங்களும், 1000 கார்களும் மலைப்பாதை வழியாக சென்று வருகிறது
- கோவிலுக்கு செல்லும் தார்சாலையின் இரு ஓரங்களிலும் மண் அரிப்பு ஏற்பட்டு குண்டும், குழியுமாக இருப்பதுடன் கல் குவியலாக காணப்படுகிறது
சென்னி மலை,
சென்னிமலை முருகன் கோவில் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவிலாகும். இந்த கோவிலில் தான் கந்த சஷ்டி கவசம் அரங்கே ற்றம் செய்யப்ப ட்டது. பல வருடங்களுக்கு முன்பு சென்னிமலை முருகன் கோவிலுக்கு செல்ல 1320 படிக்கட்டுகள் மட்டும் இருந்தது.
அதன்பிறகு வாகனங்கள் செல்லும் வகையில் கடந்த 15.2.1963 அன்று 4 கி.மீ தூரத்திற்கு மலைப்பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு ஒரே வருடத்தில் 58 ஆயிரத்து 576 ரூபாய் மதிப்பில் சாலை அமைக்கும் பணியை நிறைவு செய்து 15.-2.-1964 முதல் மலைப்பாதையில் கார்கள் மட்டும் செல்லும் வகையில் அனுமதிக்க ப்பட்டது. அதன்பிறகு நாளடைவில் மண் சாலை தார்சாலையாக மாற்ற ப்பட்டு தற்போது அனைத்து வாகனங்களும் சென்று வருகிறது.
மழைக்காலங்களில் முருகன் கோவிலுக்கு செல்லும் தார்சாலையின் ஓரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு அடிக்கடி போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வந்தது. கடந்த 2014-ம் ஆண்டு சென்னிமலை முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது தார்சாலை சீரமைக்க ப்பட்டது. அதன்பிறகு பல முறை பலத்த மழை பெய்ததால் தார் ரோட்டின் ஓரங்களில் மீண்டும் அதிக அளவில் மண் அரிப்பு ஏற்பட்டது.
இதனை கோவில் நிர்வாகத்தினர் சீரமைப்பு செய்து வந்தனர். ஆனால் நிரந்தரமான பராமரிப்பு இல்லாததால் மீண்டும் தார்சாலை ஓரங்களில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. சென்னிமலை முருகன் கோவிலுக்கு வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை நாட்களில் அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
அன்று மட்டும் சராசரியாக 3 ஆயிரம் இரு சக்கர வாகனங்களும், 1000 கார்களும் மலைப்பாதை வழியாக சென்று வருகிறது. இதன் மூலம் வாகன கட்டணமாக கோவில் நிர்வாகத்துக்கு ரூ. 50 ஆயிரம் வரை கிடைக்கிறது.
அதுமட்டுமல்லாமல் கோவிலுக்கு சொந்தமான இரண்டு பஸ்கள் மூலம் தலா ரூ.10 ஆயிரத்து க்கும் மேல் டிக்கெட் கட்ட ணமாக கிடைக்கி றது. மேலும் உண்டியல் காணிக்கையாக ஆண்டுக்கு ரூ.1.5 கோடிக்கு மேல் கிடைப்பதால் முதல் நிலை கோவில் அளவுக்கு சென்னிமலை முருகன் கோவிலின் தரம் உயர்ந்துள்ளது. ஆனால் கோவிலுக்கு செல்ல பாதுகாப்பான சாலை வசதி இல்லை என பக்தர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து சென்னி மலை முருகன் கோவிலுக்கு அடிக்கடி சென்று வரும் பக்தர்கள் கூறும்போது,
ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக சென்னிமலை முருகன் கோவில் உள்ளது. செவ்வாய்க்கி ழமை நாட்கள் மட்டுமின்றி சஷ்டி, கிருத்திகை, அமா வாசை உள்ளி ட்ட அனைத்து நாட்களிலும் இந்த கோவி லுக்கு ஆயிரக்க ணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
கோவிலுக்கு செல்லும் தார்சாலையின் இரு ஓரங்களிலும் மண் அரிப்பு ஏற்பட்டு குண்டும், குழியுமாக இருப்பதுடன் கல் குவியலாக காணப்படுகிறது. இதனால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விடுவதற்காக இரு சக்கர வாகன ஓட்டிகள் தார் ரோட்டில் இருந்து கீழே இறங்கினால் பள்ளத்தில் தான் விழ வேண்டும்.
அப்படி குடும்பத்தோடு விழுந்தவர்கள் ஏராளம். கடந்த ஆங்கில புத்தாண்டு தினத்தில் இளம்பெண் ஒருவர் எதிரில் வந்த வாகனத்துக்கு வழி விடுவதற்காக கீழே இறங்கிய போது தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். பின்னர் அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இப்படி பல விபத்துக்கள் நடந்துள்ளது. செவ்வாய்க் கிழமை நாட்களில் இரவு 8 மணி பூஜையில் கலந்து கொள்ள பெரும்பாலான பக்தர்கள் குடும்பத்துடன் மோட்டார் சைக்கிளில் வருவார்கள். அவர்கள் அனைவரும் உயிரை கையில் பிடித்து கொண்டு தான் செல்ல வேண்டும்.
அதனால் உடனடியாக சென்னிமலை முருகன் கோவிலுக்கு செல்லும் தார்சாலையை அகலப்படுத்தி விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.






