என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கபடிப்போட்டி"

    • மாநிலங்களுக்கு இடையேயான யுவா கபடிப்போட்டியில் தமிழக அணியில் திருச்சி வீரர் சாதனை படைத்தார்
    • சிறந்த ஆட்ட நாயகனாகவும் தேர்வானார்

    உப்பிலியபுரம்:

    திருச்சி மாவட்டம் மண் ணச்சநல்லூரை அடுத் துள்ள பாளைய–நல்லூர் கிரா–மத்தைச் சேர்ந்த மருத–முத்து-கண்ணகி தம்பதி–யின–ரின் 8 குழந்தை–களில் 7-வது வாரிசு சுதாகர் (வயது 21).திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் இரண்டா–மாண்டு வரலாறு படிக்கும் மாணவரான இவர் இளம் வயது முதலே கபடியில் ஆர்வம் காட்டியதால், கல்லூ–ரியில் விளையாட்டு ஒதுக்கீட்டு மாணவராக தேர்வு செய்யப்பட்டு பயின்று வருகிறார்.யுவா கபடி போட்டிகளின் முக்கிய நோக்கம் இளை–ஞர்களிடமிருந்து திறமை–களை வெளிக்கொணர வேண்டும் என்பதேயாகும். கபடியில் ஆர்வமுள்ள, அதையே தொழிலாகக் கொள்ள விரும்பும் இளை–ஞர்களுக்கு அதிகா–ரிகள் களம் அமைத்துக் கொடுப் பதே இப்போட்டி–களின் நோக்கமாகும்.ஆண்டு முழுவதும் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்வது, ஆண்டு முழுவதும் வீரர்களின் பதிவுகளை உருவாக்குவது யுவாவின் நோக்கமாகும்.ராஜஸ்தான், உத்தரபிர–தேசம், ஹரியானா, பாண் டிச்சேரி, தமிழ்நாடு முத–லான மாநிலங்களுக்கி டை–யேயான யுவா கபடிப் போட்டி, பாண்டிச்சேரி கடற்கரை ராஜீவ்காந்தி உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. தமிழ்நாட்டின் சார்பாக பழனி டஸ்கர்ஸ் அணி பங்கேற்றது. சேலம் சஞ்சீவியின் தலைமையில் பங்கேற்ற அணியில் சுதாகர் பங்கேற்றார்.யுவா குளிர்காலத் தொடர் கபடிப்போட்டிகள் கடந்த நவம்பர் 27-ந்தேதி தொடங்கி 35 நாட்கள் நடைபெற்றன. இந்த போட்டிகளில் ஹரி–யானா மாநிலத்தைச் சேர்ந்த ஹம்பி ஹீரோஸ் அணி முதல் பரிசான ரூ.20 லட்சத்தை தட்டிச் சென்றது. இரண்டாவது பரிசை தமிழக அணி பழனி டஸ்கர்ஸ் வென்று ரூ.10 லட்சம் ரொக்கப்பரிசையும் பாராட்டுகளையும் பெற்றது.தினசரி தேர்ந்தெடுக்கப் படும் சிறந்த விளையாட்டு வீரருக்கான பரிசுத் தொகையை 25 முறை சுதாகர் வென்றுள்ளார். மேலும் தொடர் ஆட்டத்தின் சிறந்த ஆட்ட நாயகனாக சுதாகர் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு லட்சம் ரொக்கப் பரி–சினை வென்றுள்ளார். 2021-ல் ஹரியானாவில் நடைபெற்ற அனைத்திந்திய கபடிப் போட்டியில் 47-வது ஜூனியர் போட்டியில் சுதாகர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.பயிற்சிகளுக்காகவும், குடும்ப சூழ்நிலை காரண–மாகவும் தொண்டு நிறுவ–னங்களிடமும், சமூக ஆர்வலர்களிடமும் உதவி கோரியுள்ளார். வரவிருக்கும் அனைத்திந்திய கப–டிப்போட்டியில் பங்கேற்று, சிறந்த விளை–யாட்டு வீரருக் கான பரிசைப்பெற்று, தமி–ழகத்திற்கும், திருச்சிக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்பதே இவரது இலக்காக உள்ளது.

    ×