என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுக்கோட்டை மாணவர் உயிரிழப்பு"

    • சீனாவில் கொரோனா புதிய வகையான பி.எப். 7 வேகமாக பரவி வருகிற நிலையில், சேக் அப்துல்லாவை கொரோனா பரிசோதனை முடிந்து தனிமைப்படுத்தி உள்ளனர்.
    • புத்தாண்டு தினத்தில் சீனாவில் சிகிச்சையில் இருந்த சேக் அப்துல்லா இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை போஸ்நகரை சேர்ந்த சையது அபுல்ஹாசன் சாதலியின் மகன் சேக் அப்துல்லா (வயது 22). இவர் சீனாவில் ஜியான்ஹனா மாவட்டத்தில் கியூஹார் மருத்துவ பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பு கடந்த 2017-ம் ஆண்டு சேர்ந்து படித்தார்.

    அதன்பின் கொரோனா காலகட்டத்தில் சேக் அப்துல்லா சொந்த ஊரான புதுக்கோட்டை திரும்பினார். இங்கிருந்தபடியே ஆன்லைனில் படிப்பை தொடர்ந்தார். இந்த நிலையில் 5 ஆண்டுகள் படிப்பு முடிந்த நிலையில் மருத்துவ பயிற்சிக்காகவும், சான்றிதழ் பெறுவதற்காகவும் வருமாறு சீனாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் இருந்து சேக் அப்துல்லாவை அழைத்துள்ளனர். இதையடுத்து கடந்த ஆண்டு (2022) டிசம்பர் மாதம் 11-ந் தேதி சேக் அப்துல்லா மீண்டும் சீனா புறப்பட்டு சென்றார்.

    சீனாவில் கொரோனா புதிய வகையான பி.எப். 7 வேகமாக பரவி வருகிற நிலையில், சேக் அப்துல்லாவை கொரோனா பரிசோதனை முடிந்து தனிமைப்படுத்தி உள்ளனர். அதன்பின் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு சென்ற அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து அதே பல்கலைக்கழக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்த நிலையில் சீனாவில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த சேக் அப்துல்லா நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக பல்கலைக்கழகத்தில் இருந்து அவரது பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனர். இதனை கேட்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் வீட்டில் இருந்தவர்கள் கதறி அழுதனர். மாணவர் இறப்பு தொடர்பாக அவரது குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கையில், ``சேக் அப்துல்லாவின் உடல்நிலை மோசமாக இருந்ததில் சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்டவை பாதிப்படைந்ததால் இறந்ததாக பல்கலைக்கழகத்தில் இருந்து தகவல் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பு இருந்ததாக அவர்கள் எதுவும் கூறவில்லை'' என்றனர்.

    ஆங்கில வருடம் 2022 முடிந்து 2023-ம் ஆண்டு நேற்று பிறந்தது. இந்த நிலையில் புத்தாண்டு தினத்தில் சீனாவில் சிகிச்சையில் இருந்த சேக் அப்துல்லா இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது மரணம் குறித்த தகவல் கேட்டு குடும்பத்தினர், உறவினர்கள் பலரும் சோகமடைந்தனர்.

    ×