என் மலர்
நீங்கள் தேடியது "போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்."
- கத்தி, அரிவாள் பறிமுதல்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலோமன் ராஜா தலைமையிலான போலீசார் நேற்று அரக்கோணம் திருவள்ளூர் ரோடு, சில்வர் பேட்டை, எக்கு நகர் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சதி திட்டம்
அப்போது எக்கு நகர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் 4 பேர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் போலீசார் வருவதை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதை பார்த்த போலீசார் அவர்களை விரட்டிச்சென்று மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
4 பேர் கைது
விசாரணையில் அவர்கள் 4 பேரும் அரக்கோணம் பகுதியை சேர்ந்த ரியாஸ் அஹமது, மணிகண்டன், பூவரசன் மற்றும் ஆகாஷ் என்பதும், கொள்ளைடிப்பதற்காக திட்டம் தீட் டியதும் தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப்பதிவுசெய்து 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் கொள்ளை சம்பவத்திற்காக வைத்திருந்த கத்தி, அரிவாளை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.






