என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிறிஸ்துமஸ் பிரார்த்தனை"

    • நள்ளிரவு 12 மணிக்கு ஏசு பாலகன் பிறக்கும் நிகழ்ச்சி நடந்தது
    • நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய கிறிஸ்தவ ஆலயங்களிலும் நேற்று நள்ளிரவு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

    திருவண்ணாமலை தாசில்தார் அலுவலகம் அருகில் அமைந்துள்ள உலக மாதா ஆலயத்தில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு ஏசு பாலகன் பிறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். இதேப்போல் பெரியார் சிலை அருகில் அமைந்துள்ள ஆற்காடு லுத்தரன் திருச்சபையிலும் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றன.

    வந்தவாசி காஞ்சிபுரம் சாலையில் உள்ள தூய இருதய ஆலயத்தில் பங்குத்தந்தை பன்னீர்செல்வம் தலைமையில் கூட்டு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் பல்வேறு கிறிஸ்துவ பாடல்களை பாடிக்கொண்டு திருப்பலியில் ஈடுபட்டனர்.

    இதை தொடர்ந்து நள்ளிரவு 12 மணி அளவில் இயேசுநாதர் கிறிஸ்து பிறந்த குழந்தை இயேசுவை கிறிஸ்துவ குடிலில் வைக்கப்பட்டது.

    கூட்டு திருப்பலி நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    • புத்தாடை அணிந்து கேக் வழங்கி கொண்டாடினர்
    • ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்

    ராணிபேட்டை:

    ராணிபேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை, வாலாஜா, அரக்கோணம், சோளிங்கர், ஆற்காடு, காவேரிப்பாக்கம், பனப்பாக்கம், நெமிலி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தேவாயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

    இதில் கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து கேக் வழங்கி கொண்டாடினர். கிறிஸ்தவ ஆலயங்களில் ஓலைக்குடிசையில் இயேசு பிறப்பது போன்ற நிகழ்ச்சிகள் சித்தரித்து காட்டப்பட்டன. கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    ×