என் மலர்
நீங்கள் தேடியது "மாடு விடும் திருவிழா"
- 100-க்கும் மேற்பட்ட மாடுகள் கலந்து கொண்டது
- 10 பேர் காயம்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த கொளத்தூர் கிராமத்தில் மாடு விடும் திருவிழா பிள்ளையார் கோவில் தெருவில் நடைபெற்றது.
இதில் 100க்கும் மேற்பட்ட மாடுகள் வேகமாக ஓடியது.இதில் வேடிக்கை பார்க்க வந்த கொங்கராம்பட்டு யுகேஷ் (24), மூஞ்சூர்பட்டு ராஜேஷ்குமார் (27) கேளூர் சந்தைமேடு குமார் (51) உள்பட 10 பேர் காயமடைந்தனர்.
- 100 காளைகள் சீறிப்பாய்ந்து ஓடியது
- இளைஞர்கள் ஆரவாரம்
வேலூர்:
வேலூர் மாவட்டம், கணியம்பாடி அடுத்த கீழ் அரசம்பட்டில் பொங்கல் பண்டிகையொட்டி எருது விடும் விழா இன்று நடந்தது. விழாவுக்கு சப்- கலெக்டர் பூங்கொடி தலைமை தாங்கினார்.
தாசில்தார் செந்தில், ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர் ஷீலா வரவேற்றார். இதில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
விழா நடந்த வீதியின் இருபுறமும் மரக்கட்டைகளால் ஆன தடுப்பு வேலிகள் மற்றும் சாலையின் நடுவே மண் கொட்டப்பட்டிருந்தன.
காலை 10 மணி அளவில் அதிகாரிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டதை தொடர்ந்து காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது.
சீறி பாய்ந்தது ஓடிய காளைகளை இளைஞர்கள் ஆரவாரம் செய்து ரசித்தனர்.






