என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேபிள் டி.வி.ஆபரேட்டர்கள்"

    • தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
    • நகர போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் ,கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்களுக்கும் நீண்ட நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

    தருமபுரி,

    இலவசமாக செட்டப் பாக்ஸ்களை பொது மக்களுக்கு வழங்கி விட்டு தற்போது செயல்படாத செட்டப்பாக்ஸ்களுக்கு கிரய தொகை என்று சொல்லி பெருந்தொகையை வசூலிப்பது தொடர்பாக தமிழக கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்கள் பொது நலச்சங்கத்தின் மாவட்ட தலைவர் சேட்டு தலைமையில் தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

    இந்த போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநில துணை தலைவர் தாமோதரன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்துக்கு எதிரே தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

    அதனை தொடர்ந்து காவல் துறை மற்றும் வருவாய் துறையினர் கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்களை குற்றவாளிகள் போல் நடத்துவது, கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்களின் நலவாரியம் அமைப்பது தொடர்பாக மனுவை கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனுவாக கொடுக்க முற்பட்டனர். அதனை தொடர்ந்து அங்கு வந்த நகர போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் ,கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்களுக்கும் நீண்ட நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு 5 பேர் மட்டும் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் மனு கொடுக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் நவாஸ் அனுமதி வழங்கினார்.

    இந்த மனு கொடுக்கும் போராட்டத்தில் மாவட்ட செயலாளர் முனுசாமி, மாவட்ட பொருளாளர் முருகன் மற்றும் 200-க்கும் மேற்பட்ட கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்கள் கலந்து கொண்டனர்.

    • அரசு கேபிள் இணைப்பின் மூலம் வழங்கப்படும் சேனல் சரியாக ஒளிபரப்பா கவில்லை. அடிக்கடி சர்வர் குளறுபடியும் ஏற்படுகிறது.
    • பல அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள், தனியார் நிறுவனத்துடன் கைகோர்க்க திட்டமிட்டுள்ளனர்.

    தருமபுரி,

    அரசு கேபிள் டி.வி. ஆப்பரேட்டர்களுக்கு எச்.டி., பாக்ஸ் வழங்குவதில் தாமதம் செய்து வருவதால், அவர்கள் தனியார் நிறுவனங்களுடன் கைகோ ர்க்க திட்டமிட்டுள்ளனர்.

    தமிழக அரசு, 2007-ம் ஆண்டு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை தொடங்கியது. இதற்காக மாவட்டங்கள் தோறும் பல லட்சம் செட்டாப் பாக்சுகள் வழங்கப்பட்டது.

    இவை சாதாரண எச்.டி. தரம் என்பதால் பல கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து எச்.டி. தரத்தில் ஒளிபரப்பினர்.

    இதனால் ஆபரேட்டர்களுக்கு அரசு சார்பில் நோட்டீசு அனுப்பப்பட்டது.

    தனியார் நிறுவன எச்.டி., பாக்சுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் தமிழக அரசு சார்பில் எச்.டி., பாக்ஸ் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் அதற்கான நடவடிக்கை தாமதமாகிறது. மேலும் பல இடங்களில் அரசு கேபிள் இணைப்பின் மூலம் வழங்கப்படும் சேனல் சரியாக ஒளிபரப்பா கவில்லை. அடிக்கடி சர்வர் குளறுபடியும் ஏற்படுகிறது.

    இதனால் பல அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள், தனியார் நிறுவனத்துடன் கைகோர்க்க திட்டமிட்டுள்ளனர்.

    இதுகுறித்து தருமபுரி மாவட்ட கேபிள் ஆபரேட்டர் ஒருவர் கூறியதாவது:-

    மாவட்டத்தில் அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

    தற்போது பலர் அரசு கேபிள் டி.வி. குளறுபடி பிரச்னையால் முழுமையாக தனியார் நிறுவனங்களுடன் கைகோ ர்க்க திட்டமிட்டுள்ளனர்.

    மேலும் தற்போது வாடிக்கையாளர்களே அரசு கேபிளில் இருந்து எச்.டி. தரத்திலான ஒளிபரப்பை விரும்புவதால் ஆபரேட்டர்களுக்கு வேறு வழியில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    ×