என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழிபாட்டு தலங்களை பாதுகாக்க வலியுறுதல்"

    • நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் எதிரில் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்தில் பச்சை தமிழகம், நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

    நாகர்கோவில்:

    வழிபாட்டு தலங்களை பாதுகாக்க வலியுறுத்தி தமிழகம் உள்பட நாடு முழுவதும் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் எதிரில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கன்னியாகுமரி மாவட்ட தலைவர் சத்தார் அலி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், தொகுதி நகர, கிளை தலைவர்கள் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஜாபர் அலி வரவேற்றார்.

    மாவட்ட துணை தலைவர் ஜாஹிர் ஹுசைன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட எஸ்.டி.பி.ஐ.கட்சியின் வர்த்தக அணி மாநில பொது செயலாளர் ஜாபர் அலி உஸ்மானி, பச்சை தமிழகம் மாநில தலைவர் சுப. உதயகுமார், நாம் தமிழர் கட்சியின் மாநில பேச்சாளர் ஹிம்லர், எஸ்.டி.பி.ஐ. மாவட்ட பொது செயலாளர் மணவை சாதிக் அலி ஆகியோர் கண்டன உரையாற்றினர். நாகர்கோவில் மாநகர தலைவர் மீரான் மைதீன் தங்கப்பா நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

    ×