என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீட்டில் கொள்ளை முயற்சி"

    • மர்ம நபர்கள் சிலர் வீட்டின்பூட்டைஉடைத்து உள்ளே நுழைந்து உள்ளனர்.
    • இது குறித்து கொடுமுடி போலீசார் விசாரணை நடத்தினர்.

    கொடுமுடி:

    ஈேராடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள ஆவுடையார் பாறை ஊராட்சி மன்ற தலைவராக உள்ளவர் வசந்தி தனபால்.இவருக்கு நாகம நாயக்கன் பாளையத்தில் 2 வீடுகள் உள்ளன.

    இதில் நேற்று ஒரு வீட்டை பூட்டி விட்டுஅதே பகுதியில் உள்ள மற்றொருவீட்டிற்கு சென்று இரவில் தங்கினர். இந்த நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் இவர்களது வீட்டின்பூட்டைஉடைத்து உள்ளே நுழைந்து உள்ளனர்.

    இன்று காலை வீட்டின் பூட்டி உடைக்கப்பட்டது பற்றி தெரியவந்ததும் வசந்தி தனபால் மற்றும் அவரது கணவர் சென்று பார்த்தனர். மேலும் இது குறித்து கொடுமுடி போலீசுக்கும்தகவல் கொடுக்கப்பட்டது.

    அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.அப்போது கொள்ளை முயற்சி நடந்து இருப்பது தெரியவந்தது.

    ×