என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்ரேல் தூதர்"

    • காசாவில் இனப்படுகொலை நடக்கவில்லை என்றார் இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர்.
    • இஸ்ரேல் 25,000 ஹமாஸ் பயங்கரவாதிகளையே கொன்றது என தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் எம்.பி.யும், பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி, இன்று தனது எக்ஸ் தளத்தில், இஸ்ரேலிய அரசு இனப்படுகொலை செய்துவருகிறது. 60,000-க்கும் மேற்பட்ட மக்களை அது கொன்றுள்ளது, இவர்களில் 18,430 பேர் குழந்தைகள்.நூற்றுக்கணக்கானோரை இஸ்ரேல் பட்டினியால் கொன்றுள்ளது. இதில் பலர் குழந்தைகள். பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் அழிவை கட்டவிழ்த்து விடும்போது இந்திய அரசு அமைதியாக இருப்பது வெட்கக்கேடானது என பதிவிட்டு இருந்தார்.

    இந்நிலையில், பிரியங்கா காந்தியின் எக்ஸ் பதிவை டேக் செய்து இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூவென் அசார் பதில் அளித்துள்ளார்.

    அவரது பதிவில், வெட்கக்கேடானது உங்கள் வஞ்சகம். இஸ்ரேல் 25,000 ஹமாஸ் பயங்கரவாதிகளையே கொன்றது. பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்ட உயிரிழப்புக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருப்பது ஹமாசின் கொடூரமான தந்திரங்கள். வெளியேற அல்லது உதவி பெற முயற்சிக்கும் மக்களைச் சுடுவது, அவர்களுக்கு எதிராக ராக்கெட் தாக்குதல்களை நடத்துவது ஆகியவை காரணமாகவே பொதுமக்கள் உயிரிழக்க நேரிடுகிறது.

    காசாவுக்கு 20 லட்சம் டன் உணவை இஸ்ரேல் வழங்கியது. அவற்றைக் கைப்பற்ற ஹமாஸ் முயல்வதன் மூலம் பட்டினியை உருவாக்குகிறது. கடந்த 50 ஆண்டுகளில் காசாவின் மக்கள் தொகை 450 சதவீதம் அதிகரித்துள்ளது. அங்கு இனப்படுகொலை இல்லை என தெரிவித்தார்.

    இதேபோல், அல்ஜசீரா தொலைக்காட்சியைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் 5 பேர் கொல்லப்பட்டதற்கும் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தேர்வுக்குழு தலைவர் நாடவ் லேபிட்டை இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நோர் கிலோன் கண்டித்துள்ளார்.
    • உண்மை எப்போதும் பேராபத்தானது என தி காஷ்மீர் பைல்ஸ் படத்தின் இயக்குனர் அக்னிஹோத்ரி கண்டனம்

    புதுடெல்லி:

    கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில், 'தி காஷ்மீர் பைல்ஸ்' படம் திரையிடப்பட்டதற்கு, தேர்வுக்குழு தலைவரும் இஸ்ரேலிய திரைப்பட இயக்குனருமான நாடவ் லேபிட், கடும் அதிருப்தி தெரிவித்தார்.

    ‛தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் தயாரிக்கப்பட்ட இழிவான திரைப்படம். பிரசார தன்மை கொண்டதாக உள்ளது' என அவர் கூறினார். அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்வுக்குழுவின் நாடவ் லேபிட்டுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    ‛உண்மை எப்போதும் பேராபத்தானது. அது சிலரை பொய் பேசவைத்துவிடும்' என தி காஷ்மீர் பைல்ஸ் படத்தின் இயக்குனர் அக்னிஹோத்ரி பதில் அளித்துள்ளார்.

    இந்நிலையில், இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த இயக்குநர் நாடவ் லேபிட்டை இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நோர் கிலோன் இன்று பகிரங்கமாகக் கண்டித்துள்ளார்.

    இதுதொடர்பாக நோர் கிலோன், நாடவ் லேபிட்டுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறியருப்பதாவது:-

    இந்திய கலாச்சாரத்தில் விருந்தாளியை கடவுள் போன்றவர் என்கிறார்கள். திரைப்பட விழாவின் தேர்வுக்குழுவின் தலைவராக இருப்பதற்கான இந்திய அழைப்பையும், அவர்கள் உங்களுக்கு அளித்த நம்பிக்கை, மரியாதை மற்றும் உபசரிப்பையும் நீங்கள் மிகவும் மோசமாகு துஷ்பிரயோகம் செய்துள்ளீர்கள். இதற்காக நீங்கள் வெட்கப்பட வேண்டும், மன்னிப்பு கேட்கவேண்டும்.

    இதுபோன்ற கருத்துக்களை நான் கண்டிக்கிறேன். எந்த நியாயமும் இல்லை. இது இங்குள்ள காஷ்மீர் பிரச்சினையின் உணர்வுகளை காட்டுகிறது, Ynet-க்கு நீங்கள் அளித்த நேர்காணலில் இருந்து, தி காஷ்மீர் பைல்ஸ் மீதான உங்கள் விமர்சனத்திற்கும், இஸ்ரேலிய அரசியலில் என்ன நடக்கிறது என்பதில் உங்கள் அதிருப்திக்கும் இடையே உள்ள தொடர்பு தெளிவாகிறது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    மேலும், இந்தியா-இஸ்ரேல் உறவுகள் மிகவும் வலுவானவை என்றும், நாடவ் லேபிட்டின் கருத்துகளால் ஏற்படும் பாதிப்பில் இருந்து மீண்டு வரும் என்றும் தூதர் நோர் கிலோன் ட்வீட் செய்துள்ளார்.

    ×