என் மலர்
நீங்கள் தேடியது "தலைமறைவாக இருந்தவர் கைது"
- பிரபாவதி மற்றும் கோவிந்தராஜ் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- தலைமறைவாக இருந்த தமிழரசன் அவனது வீட்டிற்கு நேற்று வந்த போது கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள லிங்கநாயக்கனஅள்ளி பகுதியை சேர்ந்த மாது. இவரது மகன் தர்மதுரை (வயது 36). இவரது மனைவி பிரபாவதி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை கணவன் தர்மதுரை கண்டித்துள்ளார். இந்த நிலையில் தர்மதுரை மகுடஞ்சாவடி - வீரபாண்டி இடையிலான ரெயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். இவரது இறப்பு குறித்து சேலம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் தீவட்டிபட்டி போலீசில் கோவிந்தராஜ் வேறொரு வழக்கில் சிக்கினான். அவரிடம் நடத்திய விசாரனையில் தர்மதுரையை கொலை செய்து தண்டவாளத்தில் வீசியது தெரியவந்தது. பின்பு இந்த வழக்கு கடத்தூர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி நடத்திய விசாரணையில் கள்ளக்காதலை கண்டித்ததால் கணவனை தோசை சட்டியால் தலையில் அடித்து கொலை செய்து பின்பு கள்ளக்காதலன் கோவிந்தராஜ் மற்றும் தமிழரசன் ஆகியோர் உதவியுடன் உடலை காரில் ஏற்றி தண்டவாளத்தில் வீசியதாக பிரபாவதி தெரிவித்தார். இதையடுத்து பிரபாவதி மற்றும் கோவிந்தராஜ் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் கொலைக்கு உடந்தையாக இருந்த தமிழரசனை போலீசார் தேடி வந்தனர்.தலைமறைவாக இருந்த தமிழரசன் அவனது வீட்டிற்கு நேற்று வந்த போது கடத்தூர் போலீசார் மற்றும் தனி பிரிவு போலீசார் அவனை கைது செய்து அரூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- போலீஸ் வருவதை அறிந்து கொண்ட சத்தியமூர்த்தி, தன்னை போலீசார் கைது செய்ய கூடாது எனவும், தன்னை நெருங்கினால் கத்தியால் கையை கிழித்து இறந்துவிடுவேன் எனக்கூறி மிரட்டியுள்ளார்.
- நீதிமன்ற ஆஜருக்கு பின்னர் சத்தியமூர்த்தி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்படி காட்டிநாயனப்பள்ளி ரேஷன் கடையில் விற்பனையாளர் உள்பட அரிசி கடத்தலில் ஈடுபட்ட மூவரை கடந்த மாதம் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் கிருஷ்ணகிரியை சேர்ந்த சத்தியமூர்த்தி (வயது35) என்பவரை போலீசார் தேடி வந்தனர். சத்தியமூர்த்தி மீது ஏற்கனவே ரேஷன் அரிசி கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டவர் ஆவார்.
சத்தியமூர்த்தி கர்நாடக மாநிலத்தின் அரிசி விற்பதற்கு முக்கிய புரோக்கராக செயல்பட்டு வந்ததும் தெரிந்தது. தலைமறைவாக இருந்த சத்தியமூர்த்தி தன் குடும்பத்தினருடன் பெத்ததாளப்பள்ளியில் தங்கி இருப்பதாக உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் மூர்த்தி, நேரு, கிருஷ்ணவேணி மற்றும் போலீசார் சத்தியமூர்த்தி பதுங்கியிருந்த வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அப்போது போலீஸ் வருவதை அறிந்து கொண்ட சத்தியமூர்த்தி, தன்னை போலீசார் கைது செய்ய கூடாது எனவும், தன்னை நெருங்கினால் கத்தியால் கையை கிழித்து இறந்துவிடுவேன் எனக்கூறி மிரட்டியுள்ளார்.
சத்தியமூர்த்தியின் உறவினர்களும் போலீசாரை வீட்டிற்குள் நுழையவிடாமல் தடுத்துள்ளனர். சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு போலீசார் வீட்டின் பக்கவாட்டு கதவு வழியாக சென்று சத்தியமூர்த்தியை மடக்கி பிடித்தனர். பின்னர் நீதிமன்ற ஆஜருக்கு பின்னர் சத்தியமூர்த்தி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






