என் மலர்
நீங்கள் தேடியது "மின்சாதன பொருட்கள் திருட்டு"
- அணைக்கட்டு துனை மின் நிலையத்தில் துணிகரம்
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
அணைக்கட்டு பகுதியில் மின்சாரத்துறையின் மூலம் இயங்கிவரும் துணைமின் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகின்றது.
இங்கு பயன்ப டுத்தப்படும் மின்சாதனப் பொருட்களை அருகில் இருக்கும் குடோனில் சேகரித்து வைக்கப்பட்டு வருகின்றன.
இதனை பல நாட்களாக நோட்டமிட்ட அப்பகுதியை சேர்ந்த வாலிபர் நேற்று மாலை 6 மணிக்கு மேல் குடோனின் ஜன்னல் கம்பியினை உடைத்து உள்ளே புகுந்துள்ளா்ா.
இதனையடுத்து அங்கு இருந்த சுமார் 60 கிலோ எடைக்கொண்ட மின்சாதனப் பொருட்களை கயிற்றால் விரகு சுமை கட்டுவது போல் கட்டிக்கொண்டு ஜன்னல் வழியாக கடத்த முயற்ச்சித்துள்ளார். அப்போது சத்தம் கேட்டு ஓடி வந்த மின்சார ஊழியர்கள் வாலிபரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
இதனையடுத்து அவர் கடத்தி செல்ல வைத்து இருந்த 60 கிலோ எடைக்கொண்ட மின்சாதன கம்பிகள் பறிமுதல் செய்து போலீ சாருக்கு தகவல் கொடுத்தனர். அணைக்கட்டு போலீசார் வாலிபரிடம் விசாரித்தனர். விசாரணையில் அணைக்கட்டு பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பது தெரியவந்தது. இவர் அணைக்கட்டு சுற்றுப் பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவத்தில் ஈடுப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.
இதனால் விக்னேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பண்ணைப்புரம் வள்ளுவர் தெருவில் செல்போன் டவர் மற்றும் அலுவலகம் அமைத்து பணியாற்றி வந்துள்ளனர்.
- 2 இடங்களிலும் புகுந்த மர்ம நபர்கள் செல்போன் டவர் பேட்டரிகள், ஜென ரேட்டர்கள், ஏ.சி. மற்றும் மின்சாதன பொருட்களை திருடிச் சென்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் மேலாளராக ஜெயக்குமார் (வயது39) என்பவர் பணியாற்றி வருகிறார். போடி அம்மாபட்டி பகுதியை சேர்ந்த செல்வ க்குமார், பண்ணைப்புரம் வள்ளுவர் தெருவில் செல்போன் டவர் மற்றும் அலுவலகம் அமைத்து பணியாற்றி வந்துள்ளனர்.
இந்த நிலையில் 2 இடங்களிலும் புகுந்த மர்ம நபர்கள் செல்போன் டவர் பேட்டரிகள், ஜென ரேட்டர்கள், ஏ.சி. மற்றும் மின்சாதன பொருட்களை திருடிச் சென்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயக்குமார் இது குறித்து போடி தாலுகா மற்றும் கோம்பை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






