என் மலர்
நீங்கள் தேடியது "கடும் பனிபொழிவு"
- மழை நின்றதால், பனி பொழிவு தொடங்கியுள்ளது.
- அதிகாலை போலவே காலை 8 மணி ஆகியும், பனி மூட்டம் குறையவில்லை.
தருமபுரி,
தமிழ் மாதத்தில் கார்த்திகை மாத தொடக்கத்தில் இருந்து மாசி மாதம் வரை நான்கு மாதங்கள் பனி பொழிவு அதிகமாக காணப்படும்.
இன்று கார்த்திகை மாதம் பிறந்துள்ள நிலையில், தருமபுரி மாவட்டத்தில் கடுமையான பனிபொழிவு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் தொடர் மழை இருந்து வந்தது. தற்போது, கடந்த இரண்டு நாட்களாக மழை பொழியவில்லை. தொடர்ந்து மழை நின்றதால், பனி பொழிவு தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிபட்டி, அரூர், மொரப்பூர், பெத்தூர், கொளகம்பட்டி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கடும் பனிபொழிவுகள் ஏற்பட்டது.
அதிகாலை போலவே காலை 8 மணி ஆகியும், பனி மூட்டம் குறையவில்லை. இன்று காலை சாலையில் எதிரே வரும் ஆட்கள் தெரியாத அளவிற்கு பனி பொழிவு அதிகமாக காணப்படுகிறது.
இதனால் சாலையில் வரும் வாகனங்கள் முகப்பு விளக்கு எரிந்தவாறு சென்றன. இந்த கடும் பனி மூட்டம் காரணமாக வாகன ஒட்டிகள் சிரமத்திற்கு உள்ளாயினர்.
இதே போல் ஓசூரில் இன்றுகாலை கடும் பனிபொழிவு காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.
- கடந்த ஒரு வாரமாக காலை 9 மணி வரை பனிப்பொழிவு இருந்து வருகிறது.
- முழுமையான பாதைகள் தெரியாததால், சாலையோர பள்ளத்தில் அரசு பேருந்து இறங்கியது.
தருமபுரி,
கார்த்திகை மாதம் தொடங்கிய நாள் முதல் தருமபுரி மாவட்டத்தில் கடுமையான பனிபொழிவு நிலவு வருகிறது.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக காலை 9 மணி வரை பனிப்பொழிவு இருந்து வருகிறது. தருமபுரி நகர் பகுதியில் இருந்து ஆட்சியர் அலுவலகம், எமக்குட்டியூர், காரயோனி, வெள்ளோலை, ராஜாபேட்டை வழியாக செல்லும் நகர்ப்புற பேருந்து வழக்கம்போல், அதிகாலை இயக்கப்பட்டது.
அப்பொழுது எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் இருந்துள்ளது. இந்நிலையில் அரசு பேருந்து ஏமக்குட்டியூர் அருகே வந்த போது, எதிரே இருசக்கர வாகனம் ஒன்று வந்துள்ளது.
அப்பொழுது முழுமையான பாதைகள் தெரியாததால், சாலையோர பள்ளத்தில் அரசு பேருந்து இறங்கியது. இதில் பேருந்து ஒரு பக்கமாக சாய்ந்ததால் பேருந்தில் பயணித்த பயணிகள் அலறடித்து சத்தமிட்டனர்.
ஆனால் பேருந்து சாய்ந்த நிலையில் இருந்ததால், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இயக்கி விட்டனர். தருமபுரி சுற்று வட்டார பகுதிகளில், சாலையில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு இருந்ததால், அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் இறங்கியது.
மேலும் அதிர்ஷ்ட வசமாக பெரும் பாதிப்புகள் ஏற்படவில்லை. அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் சிக்கியதால், அதிகாலை பூக்களை, விற்பனை செய்ய பூ மார்க்கெட்டிற்கு எடுத்துச் செல்லும் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
- தருமபுரி மாவட்டத்தில் கடும் பனி பொழிவு காணப்பட்டது.
- வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
தருமபுரி மாவட்டத்தில் தமிழ் மாதமான கார்த்திகை மாதம் தொடங்கி மாசி மாதம் வரை 4 மாதங்கள் வரை பனி பொழிவு அதிகமாக காணப்படும். ஆனால் தற்போது ஐப்பசி மாதம் பிறந்துள்ள சில நாட்கள் ஆகியுள்ள நிலையில், இன்று அதிகாலை முதல் தருமபுரி மாவட்டத்தில் கடுமையான பனிபொழிவு காணப்பட்டது.
கடந்த வாரம் தொடர் மழை இருந்து வந்தது. தற்போது, கடந்த 2 நாட்களாக மழை பெய்யாமல் நல்ல வெயில் அடித்து வந்தது. தொடர்ந்து பெய்த மழை நின்றதால், பனி பொழிய தொடங்கியுள்ளது. இன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள தருமபுரி நகரப்பகுதிகள், நல்லம்பள்ளி, பாலக்கோடு, காரிமங்கலம், பாப்பிரெட்டிபட்டி, அரூர் நகரம், மொரப்பூர், பெத்தூர், கொளகம்பட்டி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கடும் பனிபொழிவு இருந்தது அதிகாலை இருந்து காலை 8.30 மணி வரை பனி மூட்டம் காணப்பட்டது.
இதேபோன்று தொப்பூர் பகுதியான பெங்களூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான மூடுபனியால் முன்னால் செல்லும் ஆட்கள் தெரியாத அளவிற்கு மூடுபனி நிலவியது.
அதியமான்கோட்டை, தொப்பூர் நல்லம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கடும் பனிபொழிவு ஏற்பட்டது. அதிகாலை நேரத்தில் தொடங்கியது போலவே காலை 8மணியை கடந்தும் பனி மூட்டம் குறையவில்லை. சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிபொழிவு அதிகமாக காணப்பட்டது.
இதனால் சாலையில் வரும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றன. இந்த கடும் பனி மூட்டம் காரணமாக வாகன ஒட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாயினர்.
மேலும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் ஏற்படும் பனிப்பொழிவின் அளவிற்கு மூடுபனி ஏற்பட்டுள்ளது. நல்லம்பள்ளி சுற்றுவட்டார பகுதி சீதோசன நிலையானது ஊட்டி கொடைக்கானல் ஏற்காடு உள்ளிட்ட மலை பிரேதச பகுதிகளில் நிலவும் பனிப்பொழிவை போல காணப்பட்டது.






