என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிசை வீடுகள் அகற்றம்"

    • வருவாய்த்துறையினருக்கு வந்த புகார் அடிப்படையில் நடவடிக்கை
    • பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணசாமி நகரில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தை ஒரு சிலர் ஆக்கிரமிப்பு செய்து குடிசை வீடுகள் கட்டப்பட்டு உள்ளதாக வருவாய்த்துறையினருக்கு புகார்கள் வந்தது.

    இந்த நிலையில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று வருவாய் துறையினர் ஆய்வு செய்தனர். அதே பகுதியை சேர்ந்தவர்கள் அரசு இடத்தை ஆக்கிரமித்து குடிசை வீடுகள் கட்டியது தெரிய வந்தது.

    இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் குடிசை வீடுகளை இடித்து அகற்றினர்.

    இதில் வருவாய்துறை அதிகாரிஅசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க வேப்பங்குப்பம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • வருவாய்த் துறையினரிடம் வாக்குவாதம்
    • மாற்று இடம் வழங்கப்படமாட்டாது என தெரிவித்ததால் பரபரப்பு

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த கைனூர் பகுதிக்குட்பட்ட மேய்க்கால் புறம்போக்கில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து குடிசை வீடுகள் கட்டியி ருப்பதாக அரக்கோணம் தாசில்தார் சண்முக சுந்தரத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

    அதனைத்தொடர்ந்து தாசில்தார் சண்முகசுந்தரம் தலைமையிலான வருவாய்த் துறை அலுவலர்கள் மற்றும் அரக்கோணம் உதவிபோலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரிஷ் அசோக் தலைமையில் டவுன் இன்ஸ்பெக்டர் சாலோமன் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

    அங்கு மேய்க்கால் புறம்போக்கு பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டி ருந்த 4 குடிசை வீடுகளை அகற்றி, சுமார் 21 ஆயிரம் சதுர அடி இடத்தை மீட்டனர்.

    அப்போது ஆக்கிரமிப்பு இடத்தில் வீடு கட்டியிருந்த உரிமையாளர்கள் வருவாய்த் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தாசில்தார் சண்முகசுந்தரம் கூறுகையில்:-

    மேய்க்கால் புறம்போக்கு மற்றும் மந்தைவெளி இடத்தை யாரும் ஆக்கிரமிக்க கூடாது. இங்கே வீடு கட்டியிருந்த 4 பேருக்கும் மாற்று இடம் எதுவும் வழங்கப்பட மாட்டாது என்று தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×