என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உபரி நீர் வெளியேற்றம்"

    • பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர்
    • விவசாயிகள் மகிழ்ச்சி

    வந்தவாசி:

    வந்தவாசி பகுதியில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வந்தவாசி அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது.

    ஏரி முழு கொள்ளளவு எட்டி கலங்கள் வழியாக உபரி நீர் வெளியேறி வருகிறது. இதைத் தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த கிராம பொதுமக்கள் பூஜை செய்து புடவை செலுத்தி கற்பூரம் ஏற்றி தண்ணீரை மலர் தூவி வரவேற்றனர்.

    மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. ஏரி முழு கொள்ளளவை எட்டி தண்ணீர் வெளியேறி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • பழனி பாலாறு-பொருந்தலாறு, வரதமாநதி, குதிரையாறு உள்ளிட்ட அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து உள்ளது.
    • அணையில் இருந்து உபரிநீர் தொடர்ச்சியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

    பழனி:

    கொடைக்கானல், தாண்டிக்குடி மலைப்பகுதியில் பெய்யும் மழைப்பொழிவை பொருத்து பழனியில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பரவலாக தற்போது மழை பெய்து வருவதால் மலையடிவாரத்தில் உள்ள பழனி பாலாறு-பொருந்தலாறு, வரதமாநதி, குதிரையாறு உள்ளிட்ட அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து உள்ளது.

    இருப்பினும் அணையில் இருந்து உபரிநீர் தொடர்ச்சியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. பாலாறுபொருந்தலாறு அணை நீர்மட்டம் 63.75 அடியாக உள்ளது. நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் 118 கனஅடியாக உள்ளது. இதேபோல குதிரையாறு அணை நீர்மட்டம் 77.01 அடியாக உள்ளது. நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் 80 கனஅடியாக உள்ளது.

    பழனி வரதமாநதி அணை முழுகொள்ளளவான 66.47 அடி, ஒட்டன்சத்திரம் நங்காஞ்சியாறு அணை முழுகொள்ளளவான 39.37 அடியை எட்டி தண்ணீர் மறுகால் பாய்ந்து வருகிறது.

    ×