என் மலர்
நீங்கள் தேடியது "சூறையாடிய கரடி."
- மஞ்சூர் பஜார் பகுதியில் திலிப்குமார் என்பவரது கடையை பலமுறை கரடி உடைத்து பொருட்களை சூறையாடி சென்றது
- கரடியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மஞ்சூர்,
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சமீபகாலமாக கரடி ஒன்று நடமாடி வருகிறது.
பகல் நேரங்களில் அருகில் உள்ள தேயிலை தோட்டங்களில் பதுங்கியிருக்கும் கரடிகள், இரவு நேரத்தில் உணவு தேடி குடியிருப்பு மற்றும் கடை வீதிகளில் நடமாடுவது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில், இரவு மஞ்சூர் பஜார் பகுதியில் உலா வந்த கரடி, அரசு தொடக்கப்பள்ளி வளாகத்திற்குள் புகுந்தது. தொடர்ந்து அங்கன்வாடி மையத்தை ஒட்டி அமைந்திருந்த சமையல் அறையின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்தது.
தொடர்ந்து மற்றொரு கதவையும் உடைத்தெறிந்த கரடி, அங்கு வைக்கப்பட்டிருந்த சமையல் எண்ணையை குடித்துவிட்டு பொருட்களையும் கீழே தள்ளி சூறையாடி சென்றது.
பஜாரின் மையப்பகுதியில் உள்ள அரசு பள்ளிக்குள் கரடி புகுந்து பொருட்களை சூறையாடி சென்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து, தகவல் அறிந்த வனத்துறையினர் பள்ளிக்கு சென்று பார்வை யிட்டு ஆசிரியர்களிடம் விசாரித்து சென்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பும் மஞ்சூர் பஜார் பகுதியை சேர்ந்த திலிப்குமார் என்பவரது கடையை பலமுறை கரடி உடைத்து பொருட்களை சூறையாடி சென்றது குறிப்பிடத்தக்கது
இடையில் ஓரிரு நாட்கள் கரடியின் நடமாட்டம் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் பஜார் பகுதியில் நடமாடி வருவதுடன் அட்டகாசத்திலும் ஈடுபடு வது வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, அட்டகாசம் செய்து வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வகுப்பறையில் உள்ள 2 பீரோக்கள், மாணவா்கள் அமரும் இருக்கைகளை உடைத்தும், புத்தகங்களை கிழித்தும் வகுப்பறையை சூறையாடியது.
- கரடியை கூண்டுவைத்து பிடித்து அடர்ந்த வனப் பகுதிக்குள் விடுவிக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் சமீபகாலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக தேயிலைத் தோட்டங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் உலவி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
ஊட்டி அருகே உள்ள உல்லத்தி ஊராட்சிக்குட்பட்ட கடசோலை பகுதியில் அரசு ஆரம்ப பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 20-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா். நேற்று காலை மாணவர்கள், ஆசிரியர்கள் வழக்கம்போல பள்ளிக்கு வந்தனர்.அப்போது பள்ளியின் வகுப்பறை மற்றும் கதவுகள் உடைக்கப்பட்டு சேதப்படுத்திருந்தது. இதையடுத்து, அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து பார்த்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அதிகாலை நேரத்தில் கரடி ஒன்று பள்ளிக்குள் புகுந்து வகுப்பறையில் உள்ள 2 பீரோக்கள், மாணவா்கள் அமரும் இருக்கைகளை உடைத்தும், புத்தகங்களை கிழித்தும் வகுப்பறையை சூறையாடியது. உணவு ஏதும் கிடைக்காததால் கரடி மீண்டும் அருகே உள்ள தேயிலை தோட்டத்துக்கு சென்று மறைந்தது.
இதையடுத்து வனத்துறையினர் அங்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து மக்கள் கூறுகையில், கரடி நடமாட்டம் இந்த பகுதியில் அதிகரித்துள்ளது. இந்த கரடியை கூண்டுவைத்து பிடித்து அடர்ந்த வனப் பகுதிக்குள் விடுவிக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






