என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் நுகர்வோர் குறை தீர்ப்பு முகாம்"

    • நிர்வாக காரணங்களால் மின் நுகர்வோர் குறை தீர்ப்பு முகாம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
    • முகாம் மீண்டும் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என திருத்தணி கோட்ட செயற்பொறியாளர் மு.சி.பாரிராஜ் தெரிவித்து உள்ளார்.

    திருத்தணி கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர் குறைதீர்ப்பு கூட்டம் மாதந்தோறும் 2-வது வியாழக்கிழமை அன்று அரக்கோணம் சாலையில் உள்ள கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுவது வழக்கம்.

    இந்த மாதத்திற்கான குறை தீர்ப்பு கூட்டம் நாளை (வியாழக்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நிர்வாக காரணங்களால் இந்த முகாம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. முகாம் மீண்டும் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என திருத்தணி கோட்ட செயற்பொறியாளர் மு.சி.பாரிராஜ் தெரிவித்து உள்ளார்.

    • மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணியளவில் திருவள்ளூரில் நடைபெற உள்ளது.
    • மின் நுகர்வோர்கள் மற்றும் பொது மக்கள் தங்கள் பகுதிகளில் மின்துறை சம்மந்தமான புகார்களை நேரில் தெரிவிக்கலாம்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் பெரிய குப்பத்தில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணியளவில் திருவள்ளூரில் நடைபெற உள்ளது.

    காஞ்சிபுரம் மின்பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் சுனில் குமார், தலைமை தாங்கி மின்நுகர்வோரிடம் மனுக்களை பெற்று தீர்வு காண்கிறார்.

    எனவே, திருவள்ளூர் கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்கள் மற்றும் பொது மக்கள் தங்கள் பகுதிகளில் மின்துறை சம்மந்தமான புகார்களை நேரில் தெரிவிக்கலாம் என்று திருவள்ளூர் கோட்ட செயற்பொறியாளர் கனகராஜன் தெரிவித்து உள்ளார்.

    ×