என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருத்தணியில் மின் நுகர்வோர் குறை தீர்ப்பு முகாம் ஒத்திவைப்பு
- நிர்வாக காரணங்களால் மின் நுகர்வோர் குறை தீர்ப்பு முகாம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
- முகாம் மீண்டும் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என திருத்தணி கோட்ட செயற்பொறியாளர் மு.சி.பாரிராஜ் தெரிவித்து உள்ளார்.
திருத்தணி கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர் குறைதீர்ப்பு கூட்டம் மாதந்தோறும் 2-வது வியாழக்கிழமை அன்று அரக்கோணம் சாலையில் உள்ள கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுவது வழக்கம்.
இந்த மாதத்திற்கான குறை தீர்ப்பு கூட்டம் நாளை (வியாழக்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நிர்வாக காரணங்களால் இந்த முகாம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. முகாம் மீண்டும் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என திருத்தணி கோட்ட செயற்பொறியாளர் மு.சி.பாரிராஜ் தெரிவித்து உள்ளார்.
Next Story






