என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பகுதி சபை கூட்டம்"

    • வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து சரவணன் எம்.எல்.ஏ. கேட்டறிந்தார்
    • பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    செங்கம்:

    செங்கம் புதுப்பாளையம் பேரூராட்சியில் பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ. தலைமையில் பகுதி சபை கூட்டம் 10-வது வார்டில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் உஸ்னாபி அனைவரையும் வரவேற்று பேசினார்.

    பேரூராட்சி மன்ற தலைவர் செல்வபாரதி மனோஜ்குமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ. கிராம மக்களிடம் கோரிக்கை களையும், நிறைவேற்ற வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

    வட்டாட்சியர் முனுசாமி, ஒன்றிய கவுன்சிலர் பவ்யாஆறுமுகம், சீனுவாசன், மாவட்ட கவுன்சிலர் அல்லிந்தல் மனோகரன், ஜெயபிரகாஷ், கா.சு.இளங்கோவன், சுதாகர், தலைமை எழுத்தர் ரமேஷ் உள்பட அப்பகுதி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கழிவுநீர் கால்வாய் அமைக்க வலியுறுத்தல்
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

    சோளிங்கர்:

    சோளிங்கர் நகராட்சி 8-வது வார்டு பகுதியில் பகுதி சபை கூட்டம், வார்டு உறுப்பினர் டி.கோபால் தலைமையில் நடை பெற்றது. நகராட்சி இளநிலை உதவியாளர் எபினேசன் முன் னிலை வகித்தார். கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பகுதி சபை உறுப்பினர்களான சுந்தர், முருகன் லட்சுமி, ஜெயந்தி ஆகியோரை அறிமுகம் செய்து வைத்தனர்.

    கூட்டத்தில் பாட்டிக்குளம் பகுதியில் நிழற்கூரை அமைக்க வேண்டும், அருகில் உள்ள கூட்டு சாலை பகுதியில் உயர்கோ புர மின் விளக்கு, மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும். போர்டின் பேட்டை அருகே உயர் கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும், தெருக்களில் அமைக்கப்பட்ட கண்கா ணிப்பு கேமராக்களை முறையாக பராமரிப்பு செய்ய வேண் டும், 8-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் கால் வாய் அமைக்க வேண்டும், தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    அதேபோன்று 24, 25, 26 ஆகிய வார்டுகளில் பகுதி சபை கூட்டம் நடைபெற்றது. 24-வது வார்டு உறுப்பினர் அருண் ஆதி, 25-வது வார்டு உறுப்பினர் தீப அரசி ஆகியோர் தலை மையில் நடைபெற்றது. நகராட்சி இளநிலை உதவியாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில். 24-வது வார்டு பகுதிக்கு பொன்னை ஆற்று குடிநீர் வழங்க வேண்டும், ஸ்ரீராம் நகருக்கு பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண் டும், மயானத்திற்கு பாதை மற்றும் சுவர் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பொதுமக்கள் கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.

    25-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் வசதி, சாலை வசதி, கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×