என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நறுவீ மருத்துவமனை"

    • நறுவீ மருத்துவமனை தலைவர் ஜி.வி.சம்பத் பேச்சு
    • மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது

    வேலூர்:

    வேலூர் நறுவீ மருத் துவமனையில் சர்வதேச மகளிர் தின விழா, பல நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு மருத்துவ மனையின் மருத்துவ சேவைகள் தலைவர் டாக் டர் அரவிந்தன் நாயர் வர வேற்றார். நறுவீ மருத்துவ மனை தலைவர் ஜி.வி. சம்பத் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    இந்திய கலாச்சாரத்தில் பாரம்பரியமாக பெண்க ளுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. இப்போது மேற்கத்திய கலாச்சாரம் பரவி இருந் தாலும், பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு நமது பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை சொல்லி வளர்த்து வருகின் றனர். சமுதாயத்தில் பெண் களுக்கு உரிய அதிகாரம் வழங்கவேண்டியது அவசி யமாகிறது.

    பெண்களுக்கு வழங்கப்படும் சம பங்கு காரணமாக இன்று பைலட், ராணுவம், காவல் துறை, மருத்துவ துறை, சட்டம் மற்றும் நீதி, நிர்வாக துறைஉள்ளிட்ட எல்லா துறை களிலும் உயர் பதவியில் வகிக்கின்றனர்.

    மருத்துவ சேவை யில் பெண்களின் பங்கு அதிகமாக உள்ளது. நறுவீ மருத்துவமனையில் ஆண் பணியாளர்களைவிட பெண் பணியாளர்கள் எண் ணிக்கை அதிகம். இந்த மருத்துவமனை, பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இவ் வாறு அவர் பேசினார்.

    சிறப்பு விருந்தினராக வேலுார் சிஎம்சி மருத்துவ மனை முன்னாள் இயக்கு னர் டாக்டர் ஜாய்ஸ் பொன் னையா கலந்துகொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

    விழாவில், மருத்துவம னையின் குழந்தைகள் நல தலைமை டாக்டர் சோனி யா மேரிகுரியன்,மகப்பேறு டாக்டர் ரம்யா, மருத்துவ மனை மகப்பேறு தலைமை டாக்டர் அருணா கேக்ரே, பொது மேலாளர் நித்தின் சம்பத் மற்றும் மருத்துவர் கள், செவிலியர்கள், ஊழிய ர்கள் என பலர் பங்கேற் றனர். மருத்துவ கண்கா ணிப்பாளர் டாக்டர் ஜேக் கப் ஜோஸ் நன்றி கூறினார்.

    • மருத்துவமனை தலைவர் ஜி.வி.சம்பத் தகவல்
    • பல்வேறு விதமான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது

    வேலூர்:

    வேலூர் நறுவீ மருத்துவமனை தலைவர் ஜி.வி. சம்பத் கூறியதாவது:-

    வேலூர் நறுவீ மருத்துவமனையில் கடந்த 18 மாதங்களில் உள் நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகள் என 2,20 லட்சத்திற்கும் மேற்ப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து சாதனை படைத்துள்ளது.

    இந்த கால கட்டத்தில் இம்மருத்துவமனையில் வெளிநாடு மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளுக்கு இருதய சிகிச்சை, நுரையீரல், மகப்பேறு மருத்துவம், சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு, குடல் நோய் சிகிச்சை, மூட்டு வலி மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, நரம்பியல் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு விதமான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குண மடைந்துள்ளனர்.

    இதில் உலகை அச்சுறுத்திய ஆட்கொல்லி நோயான கொரோனாவிற்கு இம்மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை வார்டு அமைக்கப்பட்டு இந்த நோயால் பாதிக்கப்பட்ட 3,543 நோயாளிகளுக்கு நவீன சிகிச்சை அளித்து நோயாளிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

    நறுவீ மருத்துவமனைக்கு மகப்பேறு சிகிச்சைக்காக வந்த 602 கர்பிணி பெண்களுக்கு நல்ல முறையில் பிரசவம் பார்க்கப்பட்டு குழந்தைபேறு அடைந்துள்ளனர். இருதய நோயால் பாதிக்கப்பட்ட 1,113 நோயாளிகளுக்கு அறுவை சிசிச்சை மற்றும் ஆன்ஜியோ உள்ளிட்ட பல்வேறு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

    விபத்து மற்றும் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்ட 4,735 நோயாளிகளுக்கு இம்மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் காக்கப்பட்டனர். சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட 2,716 நோயாளிகளுக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டிருக்கிறது.

    இதில் மருத்துவமனை, செயல் இயக்குநர் டாக்டர் பால் ஹென்றி, மருத்துவ சேவைகள் தலைவர் டாக்டர் அரவிந்தன் நாயர், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஜேக்கப் ஜோஸ், இயக்குநர் டாக்டர் திலிப் மத்தாய், தலைமை இயக்குதல் அலுவலர் மணிமான் ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×